அனகம் என்று பாடங்கொண்டு நீர் எனப் பொரு படுமாதலின் தண்ணீரில் உள்ள கொடியின் கொழுந்து தீப்பற்றியது போல என உரைப்பினும்அமையும். 169 | 1775. | கரும்பு அன மொழியினர், கண் பனிக்கிலர்,- வரம்பு அறு துயரினால் மயங்கியேகொலாம். இரும்பு அன மனத்தினர் என்ன நின்றனர்!- பெரும் பொருள் இழந்தவர் போலும் பெற்றியார். |
கரும்பு அன மொழியினர் - கரும்பு போன்ற பேச்சினை உடைய மகளிர்; கண்பனிக்கிலர் - கண்ணீர் அரும்பாதவராய்; பெரும் பொருள் இழந்தவர் போலும்பெற்றியர் - பெரிய செல்வத்தை இழந்து விட்டவர்களது தன்மையை உடையவராகி; இரும்புஅளமனத்தினர் என்ன நின்றனர் - இரும்பை ஒத்த மனம் உடையவர் என்று கண்டோர் சொல்லும்படி நின்றார்கள்; வரம்பு அறு துயரினால் மயங்கியே கொல் - (இவ்வாறுஆனது) அளவற்ற துன்பத்தால் திகைத்ததாலோ? பெருந்துன்பத்தில் மனம் இறுகிப் போதல் உலகியல்; அவ்வாறு ஒருசிலர் இருந்தனர், ‘ஆம்’ அசை. 170 | 1776. | நெக்கன உடல்; உயிர் நிலையில் நின்றில; ‘இக் கணம்! இக் கணம்!’ என்னும் தன்மையும் புக்கன; புறத்தன; புண்ணின் கண் மலர் உக்கன, நீர் வறந்து, உதிர வாரியே! |
உடல் நெக்கன - (சிலர்) உடல்கள் உடைந்தன; உயிர் நிலையில் நின்றில- உயிர் இருப்பில் நிலையாக இல்லாமல் போயின; இக்கணம்! இக்கணம்! என்னும்தன்மையும் புக்கன, புறந்தன - இந்தக் கணம் போய்விடும் என்னும் தன்மையும் உடையவாய்உயிர்கள் உள்ளே நுழைந்தன, வெளியே போயின; கண் மலர் - மலர்க்கண்கள்; நீர்வறந்து- நீர்வற்றி; புண்ணின் - புண்ணைப் போல; உதிர வாரி -இரத்தப் பெருக்கை; உக்கன - சிந்தின. உடல் நெக்குவிட்டு உயிர் இதோ போய்விடும் என்கின்ற நிலையில் உடலினுள் நுழைவதும்போவதுமாய் ஒரு நிலையில் நில்லாமல் இருந்தது என்பதாம். கண்கள் குருதி சிந்தின புண்ணைப்போல், ‘ஏ’ ஈற்றசை. 171 | 1777. | இரு கையின் கரி நிகர் எண் இறந்தவர், பெருளகு ஐயில் பெயர்த்தனர், தலையைப் பேணவர். ஒரு கையில் கொண்டனர், உருட்டுகின்றனர்; கரிகையின் கண் மலர் சூன்று நீக்கினார். |
இரு கையின் கரி நிகர் எண் இறந்தவர் - இரண்டு கைகளை |