உடைய யானையை ஒத்த கணக்கற்ற வீரர்கள்; பெருகு ஐயில் - பெரிய கைவாளினால்; தலையைப் பேணலர் - தலையை விரும்பாதவர்களாய்; பெயர்த்தனர் - பேர்த்து எடுத்து; ஒரு கையில் கொண்டனர் - ஒரு கையில் வைத்துக் கொண்டு; உருட்டுகின்றனர் - உருள விடுகின்றார் (வேறுசிலர்); சுரிகையின் -குற்றுடைவாளால்; கண் மலர் ?- மலராகிய கண்ணை; துன்று - குடைந்து; நீக்கினார் - போக்கினார். ஆடல் வீரர்க்கு ‘இரு கையின் கரி’ என உவமை கூறினார். ‘இருகை வேழத்து இராகவன்’ என்பது பாலகாண்டத்தொடர். மகளிர் செயல் கூறியவர், இதனால் ஆடவ வீரர்செயலைக் கூறினார். ஐயில்; அயில்-முதற்போலி. 172 | 1778. | சிந்தின அணி; மணி சிதறி வீழ்ந்தன; பைந் துணர் மாலையின் பரிந்த, மேகலை; நந்தினர், நகை ஒளி விளக்கம்; நங்கைமார் சுந்தர வதனமும், மதிக்குத் தோற்றவே. |
நங்கைமார் - மகளிரின்; அணி சிந்தின - ஆபரணங்கள் எங்கும் சிதறின; மணி சிதறி வீழ்ந்தன - அவற்றில் பொதிதந்த மணிகள் எங்கும் உதிர்ந்து விழுந்தன; மேகலை - அவர் இடையில் அணிந்த மேகலாபரணம்; பைந்துணர் மாலையின்பரிந்த - பசிய பூங்கொத்தால் ஆகிய மாலை அறுந்து விழுவது போல அறுந்து விழுந்தன; நகைஒளி விளக்கம் - புன்சிரிப்பாகிய முக ஒளி மலர்ச்சி; நந்தின- கெட்டன; சுந்தர வதனமும் - அவர்கள் அழகிய முகமும்; மதிக்குத் தோற்ற - நிலவுக்குத்தோற்றன. முன்பு மதியை வென்ற முகம் இப்போது துக்கத்தால்பொலிவிழத்தலின் மதிக்குத் தோற்றது என்றவாறாம். ‘ஏ’ காரம் ஈற்றசை. 173 அரசன் தேவியர் துயரம் | 1779. | அறுபதினாயிரர் அரசன் தேவியர், மறு அறு கற்பினர், மழைக் கண்ணீரினர், சிறுவனைத் தொடர்ந்தனர்; திறந்த வாயினர்; எறி திரைக் கடல் என இரங்கி ஏங்கினார். |
மறு அறு கற்பினர் - குற்றமற்ற கற்பினை உடைய; அறுபதினாயிரர் அரசன்தேவியர் - அறுபதினாயிரம் பேராகிய தசரதனுடைய மனைவியர்; மழைக் கண் நீரினர் - மழை போன்ற கண்ணீரை உடையவராய்; சிறுவனைத் தொடர்ந்தனர் - இராமனைப் பின்தொடர்ந்து; திறந்த வாயினர் - வாய் திறந்து; எறி திரைக்கடல் என இரங்கிஏங்கினார் - அலை வீசும் கடல் போல அழுது வருந்தினார்கள். |