பக்கம் எண் :

284அயோத்தியா காண்டம்

     இவர் உரிமை மகளிர் ஆவர். பரசுராமனிடம்  இருந்து  தன்னைக்
காத்துக் கொள்ள ஒவ்வொருஆண்டும் மணக் கோலத்துடன் இருக்க
வேண்டிய; தயரதன் அறுபதினாயிரம் மகளிரை அறுபதினாயிரம்
ஆண்டுகளில் மணந்தான் என்று ஒரு கதை உண்டு. இதுவே வான்மீகத்தில்
முந்நூற்றைம்பதின்மர் எனப்பேசப்பெற்றுள்ளது.  மூவரே பட்டத்தரசியர்
ஆவர்.                                                     174

1780.கன்னி நல் மயில்களும், குயில் கணங்களும்,
அன்னமும், சிறை இழந்து அவனி சேர்ந்தன
என்ன, வீழ்ந்து உழந்தனர் - இராமன் அல்லது,
மன் உயிர்ப் புதல்வரை மற்றும் பெற்றிலார்.

     இராமன் அல்லது - இராமனை அல்லாமல்; மற்றும் - வேறு; மன்
உயிர்ப் புதல்வரைப் பெற்றிலார்
- நிலைபெற்ற உயிராக உள்ள
புத்திரர்களைப்பெறாதவர்களாகிய அத்தேவியர்; கன்னி நல்மயில்களும் -
இளமையான நல்ல மயில்களும்; குயில் கணங்களும்- குயிற் கூட்டங்களும்;
அன்னமும் - அன்னப் பறவைகளும்;  சிறை இழந்து -இறக்கைகளை
இழந்து;  அவனி சேர்ந்தன என்ன - பூமியை அடைந்தவை போல;
வீழ்ந்து உழந்தனர் .- தரையில் விழுந்து  வருந்தினார்கள்.

     பறவைகளுக்குச் சிறகுகள் வாழ்வின் ஆதாரம். அதை இழந்த பிறகு
அவை வாழ இயலா. அதுபோலவே இராமனே இவர்கள் அனைவர்க்கும்
உயிராவான். இராமனை இழந்து உயிர் வாழஇயலாதவராக ஆயினர்.    175

1781. கிளையினும், நரம்பினும், நிரம்பும் கேழன,
அளவு இறந்து உயிர்க்க விட்டு அரற்றும் தன்மையால்,
தொளை படு குழலினோடு, யாழ்க்குத் தோற்றன -
இளையவர் அழுதினும் இனிய சொற்களே.

     இளையவர் அமுதினும் இனிய சொற்கள்- இளைய அத்தேவியரின்
அமுதத்தைக் காட்டிலும்இனிமையான சொற்கள்; அளவு இறந்து உயிர்க்க
விட்டு அரற்றும்  தன்மையால்
-அளவில்லாமல் பெருமூச்சு விட்டு
அழுகின்ற காரணத்தால்;  கிளையினும் நரம்பினும் நிரம்பும்கேழன -
மூங்கிலாலும்,  நரம்பாலும் செய்யப் பெற்றனவாகிய;  தொளைபடு
குழலினோடுயாழ்க்குத் தோற்றன
- உள்தொளை உடைய
புல்லாங்குழலோடு யாழிசைக்குத் தற்போது தோற்றுப்போயின.

     கிளை - மூங்கில். ஆகுபெயராய்ப் புல்லாங்குழலின் இசையைக்
குறித்தது.  நரம்பும்அவ்வாறே  யாழிசையைக் குறித்தது.  கேழன - சுவை
உடையன முன்பு அம்மகளிர் குரல் ஒலி குழலையும்யாழையும் வென்றது.
இப்போது  அமுது  அரற்றிய காரணத்தால் தோற்றது என்பதாம்.      176

1782. ‘புகழ் இடம், கொடு வனம் போலும், என்று, தம்
மகன்வயின் இரங்குறும் மகளிர் வாய்களால்,