பக்கம் எண் :

நகர் நீங்கு படலம் 285

 அகல் மதில் நெடு மனை, அரத்த ஆம்பல்கள்
பகலிடை மலர்ந்தது ஓர் பழனம் போன்றவே.

     ‘புகல் இடம் கொடு வனம் போலும் என்று’-  இராமனுக்கு இனித்
தங்கும் இடம்கொடிய வனம் என்று சொல்லி;  தம் மகன் வயின் -
தம்முடைய மகனாகிய இராமனிடம்; இரங்குறும் - அவலிக்கின்ற; மகளிர்
வாய்களால்
- அத்தேவியரது அமுது மேலும்சிவந்த வாய்களால்; அகல்
மதில் நெடு மனை
- அகன்ற மதிலை  உடைய பெரிய அரண்மனை; 
அரத்த ஆம்பல்கள் - செவ்வாம்பற் பூக்கள்;  பகலிடை - பகற்காலத்தில்;
மலர்ந்தது - மலர்ந்துள்ளதான;  ஓர் பழனம் போன்ற - ஒரு வயலைப்
போன்று ஆயின.

     வாய்க்கு ஆம்பல்  உவமை. அழுதலால் மேலும் சிவந்த வாய்
செவ்வாம்பல்  மலர்ந்தாற் போலும்,  பல்லாயிரம் தேவியர் அழுதலால் பல
செவ்வாம்பல்கள்பகலில் மலர்ந்த வயல் போன்றாயிற்று அரண்மனை
என்றார். ‘ஏ’ காரம்  ஈற்றசை.                                  177

1783.திடருடைக் குங்குமச் சேறும், சாந்தமும்
இடை இடை வண்டல் இட்டு ஆரம் ஈர்த்தன;
மிடை முலைக் குவடு ஓரீஇ, மேகலைத் தடங்
கடலிடைப் புகுந்த, கண் கலுழி ஆறு அரோ.,

     கண் கலுழி ஆறு - (அம் மகளிரது) கண்ணீர்ப் பெருக்காகிய
கலங்கிய ஆற்றுவெள்ளம்; திடர் உடைக் குங்குமச் சேறும்,
சாந்தமும் இடை இடை வண்டல் இட்டு
-திட்டுத் திட்டாகப் பொருந்திய
(மார்பகத்தில் பூசப்பெற்ற) குங்குமச் சேறும் செஞ்சாந்தமும்ஆகியவற்றை
நடுநடுவே சேற்றுக் குழம்பாகக் கொண்டு; ஆரம் ஈர்த்தன - (அவர்கள்
மார்பில் அணிந்துள்ள) முத்துமாலையை இழத்துக்கொண்டு;  மிடைமுலைக்
குவடு ஒரீஇ
-நெருங்கியுள்ள முலைச் சிகரங்களிலிருந்து  கீழ் இறங்கி;
மேகலைத் தடங் கடலிடைப் புகுந்த- மேகலையாகிய அகன்ற
கடலுக்குள் நுழைந்து  பாய்ந்தன.

     கலுழி - கலங்கிய நீர் ஆரம் - ஆற்றை நோக்கின்சந்தனமாம்.
மகளிரை நோக்க முத்தாரமாம். இங்கு முத்துவடம் சிலேடையாக அமைந்தது.
மற்றவைஉருவகம்.                                            178

1784.தண்டலைக் கோசலத் தலைவன் மாதரைக்
கண்டனன் இரவியும், கமல வாள் முகம் -
விண் தலத்து உறையும் நல் வேந்தற்கு ஆயினும்,
உண்டு இடர் உற்ற போது என் உறாதன?

    தண்டலைக் கோசலத் தலைவன் மாதரை- சோலை சூழ்ந்த