கோசல நாட்டுக்குத் தலைவனாய தயரதன் தேவியரை; இரவியும் - சூரியனும் (இப்போது); கமல வாள்முகம் கண்டனன் - தாமரை மலர் போன்ற ஒளியுடைய முகத்தை (இது காறும் ஒருபொழுதும் காணாதவன்) கண்டான்; விண் தலத்து உறையும் நல்வேந்தற்கு ஆயினும் - விண்ணின் கண் தங்கியுள்ள தேவ அரசனுக்கு ஆனாலும்; இடர் உற்றபோது - துன்பம் வந்தபோது; உறாதன என் உண்டு? - எவைதாம் வராதவை உண்டு. வேற்றுப்பொருள் வைப்பணி. துன்பத்தில் இருப்பவர்களுக்கு எல்லா அவமானமும் வந்து சேரும் என்பது உலகியல்; அரண்மனையை விட்டு வெளியே வராதவர் ஆதலின்இதுகாறும் சூரியனால் பார்க்கப்படாதது அவர் முகம் என்றானாம். 179 | 1785. | தாயரும், கிளைஞரும், சார்ந்துளார்களும், சேயரும், அணியரும், சிறந்த மாதரும், காய் எரி உற்றனர் அனைய கவ்வையர்; வாயிலும் முன்றிலும் மறைய மொய்த்தனர். |
தாயரும் - தாய்மார்களும்; கிளைஞரும் - உறவினர்களும்; சார்ந்துளார்களும் - சார்ந்து பற்றுக்கோடாய் எண்ணித் தங்கியுள்ளவர்களும்; சேயரும்அணியரும்- சேய்மையிலும் அண்மையிலும் உள்ளாரும்; சிறந்த மாதரும் - அழகிற்சிறந்த மகளிரும்; காய் எரி உற்றனர் அனைய - சீறும் நெருப்பில் விழுந்தாற்போன்ற; கவ்வையர் - துன்பமுற்று; வாயிலும் முன்றிலும் மறைய - அரண்மனைவாயிலும் முற்றமும் மறையும்படி; மொய்த்தனர் - நெருங்கினார்கள். கவ்வை - அரற்றுதலுக்கு ஏதுவாகிய பெருந்துன்பம். 180 இராமன் தன் மனையை அடைதல் | 1786. | இரைத்தனர், இரைத்து எழுந்து ஏங்கி, எங்கணும், திரைப் பெருங் கடல் எனத் தொடர்ந்து பின் செல, உரைப்பதை உணர்கிலன், ஒழிப்பது ஒர்கிலன், வரைப் புயத்து அண்ணல் தன் மனையை நோக்கினான். |
(அனைவரும் ) இரைத்தனர் - அழுதனர்; இரைத்து எழுந்து ஏங்கி - அமுது மெல்ல எழுந்து புலம்பி; எங்கணும் - எவ்விடத்தும்; |