பக்கம் எண் :

நகர் நீங்கு படலம் 287

திரைப் பெருங்கடல் என- அலை வீசுகின்ற பெருங்கடல் (தொடர்வது)
போல;  தொடர்ந்து பின் செல -(இராமனைப்) பின்பற்றித் தொடர்ந்து
செல்ல;  வரைப்புயத்து அண்ணல் - மலைபோன்றதோளை உடைய
தலைவனாகிய இராமன்;  உரைப்பதை  உணர்கிலன் - (அவர்களுக்கு)
ஆறுதல்சொல்வதை அறியாமலும்;  ஒழிப்பது  ஓர்கிலன் - (அவர்களை)
வராமல் தடுப்பதுபற்றிஆராயாமலும்; தன் மனையை நோக்கினான் - தன்
இல்லத்தை நோக்கிச் சென்றான்.

     பின்பற்றி வருவாரைத் தடுத்து  நிறுத்தி ஆறுதல் கூறி அகற்ற
இயலாமல் இராமன் தன் மனைக்குச் சென்றான் என்பதாம். ‘உரைப்பதை’
என்பதற்கு அவர்கள்புலம்பிக் கூறுவதை உணராதவனாய் என உரைப்பினும்
அமையும்.                                                   181

1787.நல் நெடு நளிர் முடி சூட, நல் மணிப்
பொன் நெடுந் தேரொடும் பவனி போனவன்,
துள் நெடுஞ் சீரையும் சுற்றி, மீண்டும், அப்
பொன் நெடுந் தெருவிடைப் போதல் மேயினான்.

     நல் நெடு நளிர் முடி சூட - சிறந்த பெரிய பெருமை  உடைய
மகுடத்தைச்சூடிக்கொள்ள; நல் மணிப் பொன் நெடுந் தேரொடும்
பவனி போனவன்
- நல்ல மணிகள்கட்டப்பெற்ற பொன்னால்  ஆகிய
பெரிய தேரின்மீது  உலாச் சென்ற இராமன்;  மீண்டும் - திரும்பவும்; அப்
பொன் நெடுந் தெருவிடை
- பொலிவுபெற்ற அதே பெருவீதியில்;  துன்
நெடுஞ் சீரையும்  சுற்றி
- நெருங்கிய  பெரிய மரவுரியைச் சுற்றிக்
கொண்டு;  போதல் மேயினான் - போவதைப் பொருந்தினான்.

     தேரொடு சென்றவன், சீரையொடு கொண்டு வந்தான் என்பது ஒரு
சொல் நயம். இரண்டையும் இணைத்துக் காட்டி அவலத்தை மேலும்
அதிகமாக்கினார் கம்பர்.‘கீழ்த்திசை வாயில் கணவனொடு புகுந்தேன்,
மேற்றிசை வாயில் வறியேன் பெயர்க்கு’ (சிலப். 23:182 - 3) என்ற
கண்ணகி நிலையை ஒப்பிடுக.                                    182

இராமனை வீதியில் கண்டார் உற்ற வருத்தம்  

1788.அந்தணர், அருந் தவர், அவனி காவலர்,
நந்தல் இல் நகருளார், நாட்டுளார்கள், தம்
சிந்தை என் புகல்வது? தேவர் உள்ளமும்
வெந்தனர், மேல் வரும் உறுதி வேண்டலர்.*

     அருந்தணர்-; அருந்தவர் - அரிய முணிவர்கள்; அவனிகாவலர்-
பூமிஅரசர்கள்;  நந்தல் இல் நகருளார் - கெடுதலில்லாத அயோத்தி
நகரில்  உள்ளவர்கள்; நாட்டுளார்கள் - கோசல நாட்டில் உள்ளவர்கள்;
தம் சிந்தை புகல்வது  என்?- மனம்பட்ட துன்பத்தைச் சொல்வது
எவ்வாறு;  மேல்வரும் உறுதி வேண்டலர் - (இராமன்காடு