பக்கம் எண் :

288அயோத்தியா காண்டம்

செல்வதால் தங்களுக்கு) எதிர்காலத்தில் வரும் நன்மையும்
விரும்பாதவர்களாய்; தேவர்உள்ளமும் வெந்தனர்
- (இராமனது மரவுரிக்
கோலம் கண்டும்)  தேவர்களும்  உள்ளம் வெந்துபோனார்கள்.

     தேவர்களுக்காகவே இராமன் மரவுரி தரித்துக் காடு சென்றானாகத்
தேவர்களே அக்கோலம் கண்டு தரியாதவர்களாக மனம் வெந்தனர் ஆயின்
மற்றவர் நிலையைச்சொல்வது எவ்வாறு? என்றாராம்.                183

1789.‘அஞ்சன மேனி இவ் அழகற்கு எய்திய
வஞ்சனை கண்டபின், வகிர்ந்து நீங்கலா
நெஞ்சினும் வலிது உயிர்; நினைப்பது என் சில?
நஞ்சினும் வலிய, நம் நலம்’ என்றார் - சிலர்.

     சிலர்-;  ‘அஞ்சன மேனி இவ் அழகற்கு எய்திய - மை போன்ற
உடம்பினை உடையஇந்த எழிலையுடைய இராமனுக்குப் பொருந்திய;
வஞ்சனை - பொல்லாங்கை; கண்டபின் - பார்த்த பிறகும்; வகிர்ந்து
நீங்கலா நெஞ்சினும்
- பிளவுண்டு போகாத மனத்தைக்காட்டிலும்; உயிர்
வலிது
- நம் உயிர் வலிமையாக  இருக்கிறது;  சில நினைப்பது என்? -
வேறு சில நினைப்பதனால் பயன் என்ன;  நம் நலம் - நமது நன்மை;
நஞ்சினும் வலிய’ - விடத்தினும் வலியதாயிராநின்றது;’ என்றார்-.

     இராமனுக்கு நிகழ்ந்த இக் கொடுமை  கண்ட பிறகும்,  நம்நெஞ்சு
பிளக்க வில்லை. உயிர் போகவில்லை, நமது நலம் அழகாயிருந்தது என்று
தம்மைத்தாமே நொந்துகொள்கின்றனர்.                           184

1790.‘ “மண்கொடு வரும்” என, வழி இருந்தது, யாம்,
எண்கொடு சுடர் வனத்து எய்தல் காணவோ?
பெண் கொடுவினை செயப்பெற்ற நாட்டினில்
கண்கொடு பிறத்தலும் கடை’ என்றார் - சிலர்.

     சிலர்-;  ‘மண் கொடு வரும்’ என - இராமன் அரசாட்சி கொண்டு
முடி புனைந்துவருவான் என (அக்காட்சி காண);  யாம் வழியிருந்தது
-
வழியில் காத்திருந்தது; எண் கொடு சுடர் வனத்து எய்தல் காணவோ? -
நினைக்கக் கொடிய வெப்பமுள்ள காட்டில்செல்லுதலைப் பார்ப்பதற்கோ?;
பெண் கொடுவினை செயப்பெற்ற நாட்டினில் - பெண்கொடுந்தொழில்
செய்யப் பொருந்திய நாட்டில்;  கண் கொடு பிறத்தலும் கடை -(அந்தக்
கொடுமைகளைக் காண) கண் உடையவர்களாகிப் பிறத்தலும் கீழ்த்தரமானது;’
என்றார் -.

     ‘கண் செய்த பாவம் கடலிற் பெரிது’ என்று (1706.)முண்சொல்லியதை
ஒத்தது இது.                                                 185