பக்கம் எண் :

நகர் நீங்கு படலம் 289

1791. ‘முழுவதே பிறந்து உலகு உடைய மொய்ம்பினோன்,
“உழுவை சேர் கானகத்து உறைவென் யான்” என,
எழுவதே? எழுதல் கண்டு இருப்பதே? இருந்து,
அழுவதே? அழகிது இவ் அன்பு!’ என்றார் - சிலர்.

     சிலர் -;  பிறந்து  உலகு முழுவதே உடைய மொய்ம்பினோன் -
மூத்தவனாகப்  பிறந்துஉலகம்  முழுவதையும்  தனக்கு  உடைமையாகப்
பெற்ற வலிமை உடைய இராமன்; ‘உழுவை சேர்கானகத்து உறைவெற்
யான்’ என எழுவதே?
- புலி உள்ள காட்டில் தங்குவேன் யான் என்று
சொல்லிப் புறப்படுவதா; எழுதல் கண்டு இருப்பதே? - அவன்
புறப்படுவதைப் பார்த்தும்(உடன் செல்லாமல்) நாம் இங்கு சும்மா இருப்பதா;
இருந்து  அழுவதே?-;  இவ் அன்பு அழகிதே?- (நாம் இவனிடத்தில்
வைத்த அன்பு அழகாயிருந்தது;’  என்றார்-.

     ‘எழுவதே? எழுதல் கண்டு  இருப்பதே? இருந்து  அழுவதே?’  இவ்
வடியில் ஒரு சொல்லை இன்னொருசொல் பற்றித் தொடர்ந்து வந்துள்ள
அழகு காண்க. ‘ஒற்றைச் சர மாலை யணி’  என இதனைக்கூறுவர்;
வடமொழியில்‘ஏகாவளி எனப்பெறும்.                           186

1792.வலம் கடிந்து, ஏழையர் ஆய மன்னரை
‘நலம் கடிந்து, அறம் கெட, நயக்கலீர்கள்; நும்
குலம் கடிந்தான் வலி கொண்ட கொண்டலை,
நிலம் கடிந்தாளொடு நிகர்’ என்றார் - சிலர்.

     சிலர் -;  வலம் கடிந்து - வலிமை போக்கி;  ஏழையர் ஆய
மன்னரை
-(ஏதும் செய்யாமல்) அறிவீனர்களாய் இருக்கும் அரசரைப்
பார்த்து;  ‘நலம் கடிந்து  அறம் கெட நயக்கலீர்கள் - நன்மை நீக்கி,
தருமம் அழியும்படி செயல் செய்ய விரும்பாதீர்கள்(அப்படிச் செய்தால்);
நும் குலம் கடிந்தான் வலி கொண்ட கொண்டலை- உம்முடையஅரசர்
குலத்தை (இருபத்தொரு தலைமுறை) கருவறுத்தவனாகிய  பரசுராமனது
பலிமையை வெற்றி கொண்டமேகவண்ண இராமனை;  நிலம்
கடிந்தானொடு
- அரசாட்சி நிலவுரிமையிலிருந்து  நீக்கியகைகேயியோடு;
நிகர்’ - நீங்களும் ஒப்பாவீர்;’  என்றார் -.

     அரசர்களை நோக்கி; ‘அறத்துக்குப் போராடுங்கள்; இராமனை மீண்டும்
ஆட்சியில்அமர்த்துங்கள்;  இல்லையேல் நீங்களும் கைகேயிக்குச்
சமானமாவீர்கள் என்றனர் சிலர்என்க.                            187

1793.‘திரு அரை சுற்றிய
     சீரை ஆடையன்,
பொரு அருந் துயரினன்,
     தொடர்ந்து போகின்றான்.