| 1791. | ‘முழுவதே பிறந்து உலகு உடைய மொய்ம்பினோன், “உழுவை சேர் கானகத்து உறைவென் யான்” என, எழுவதே? எழுதல் கண்டு இருப்பதே? இருந்து, அழுவதே? அழகிது இவ் அன்பு!’ என்றார் - சிலர். |
சிலர் -; பிறந்து உலகு முழுவதே உடைய மொய்ம்பினோன் - மூத்தவனாகப் பிறந்துஉலகம் முழுவதையும் தனக்கு உடைமையாகப் பெற்ற வலிமை உடைய இராமன்; ‘உழுவை சேர்கானகத்து உறைவெற் யான்’ என எழுவதே? - புலி உள்ள காட்டில் தங்குவேன் யான் என்று சொல்லிப் புறப்படுவதா; எழுதல் கண்டு இருப்பதே? - அவன் புறப்படுவதைப் பார்த்தும்(உடன் செல்லாமல்) நாம் இங்கு சும்மா இருப்பதா; இருந்து அழுவதே?-; இவ் அன்பு அழகிதே?- (நாம் இவனிடத்தில் வைத்த அன்பு அழகாயிருந்தது;’ என்றார்-. ‘எழுவதே? எழுதல் கண்டு இருப்பதே? இருந்து அழுவதே?’ இவ் வடியில் ஒரு சொல்லை இன்னொருசொல் பற்றித் தொடர்ந்து வந்துள்ள அழகு காண்க. ‘ஒற்றைச் சர மாலை யணி’ என இதனைக்கூறுவர்; வடமொழியில்‘ஏகாவளி எனப்பெறும். 186 | 1792. | வலம் கடிந்து, ஏழையர் ஆய மன்னரை ‘நலம் கடிந்து, அறம் கெட, நயக்கலீர்கள்; நும் குலம் கடிந்தான் வலி கொண்ட கொண்டலை, நிலம் கடிந்தாளொடு நிகர்’ என்றார் - சிலர். | சிலர் -; வலம் கடிந்து - வலிமை போக்கி; ஏழையர் ஆய மன்னரை -(ஏதும் செய்யாமல்) அறிவீனர்களாய் இருக்கும் அரசரைப் பார்த்து; ‘நலம் கடிந்து அறம் கெட நயக்கலீர்கள் - நன்மை நீக்கி, தருமம் அழியும்படி செயல் செய்ய விரும்பாதீர்கள்(அப்படிச் செய்தால்); நும் குலம் கடிந்தான் வலி கொண்ட கொண்டலை- உம்முடையஅரசர் குலத்தை (இருபத்தொரு தலைமுறை) கருவறுத்தவனாகிய பரசுராமனது பலிமையை வெற்றி கொண்டமேகவண்ண இராமனை; நிலம் கடிந்தானொடு - அரசாட்சி நிலவுரிமையிலிருந்து நீக்கியகைகேயியோடு; நிகர்’ - நீங்களும் ஒப்பாவீர்;’ என்றார் -. அரசர்களை நோக்கி; ‘அறத்துக்குப் போராடுங்கள்; இராமனை மீண்டும் ஆட்சியில்அமர்த்துங்கள்; இல்லையேல் நீங்களும் கைகேயிக்குச் சமானமாவீர்கள் என்றனர் சிலர்என்க. 187 | 1793. | ‘திரு அரை சுற்றிய சீரை ஆடையன், பொரு அருந் துயரினன், தொடர்ந்து போகின்றான். |
|