பக்கம் எண் :

290அயோத்தியா காண்டம்

  இருவரைப் பயந்தவள்
     ஈன்ற கான்முளை
ஒருவனோ, இவற்கு இவ்
     ஊர் உறவு?’ என்றார் - சிலர்

     சிலர் -;  ‘திரு அரை சுற்றிய சீரை ஆடையன் - அழகிய
இடுப்பின்கண் கட்டிய மரவுரி உடையை உடையவனாய்;  பொரு
அருந்துயரினன்
- ஒப்பற்ற பெரும் துன்பத்தோடு;  தொடர்ந்து
போகின்றான்
- (இராமனைப் ) பின்பற்றித் துணையாகச் செல்கின்ற;
இருவரைப் பயந்தவள் - (இலக்குமண சத்துருக்கனராகிய) இரு
பிள்ளைகளைப் பெற்றசுமித்திரையானவள்;  ஈன்ற - பெற்றெடுத்த;
கான்முளை - மகனாகிய இலக்குவன்; ஒருவனோ? - ஒருவன்
மட்டும்தானா?; இவற்கு  இவ்ஊர் உறவு’ - இராமனுக்கு  இந்தஊரில்
உறவாக இருப்பவர்  (வேறு யாரும் இலரோ);’  என்றார் -.

     தாம் இவ்வளவு பேர் இருக்கவும் இலக்குவன் மட்டு்மே பின்
தொடர்ந்து,  செல்வது  கண்டு தம்மைத் தாமே நொந்துகொண்டவர் பேசிய
பேச்சுஇது.                                                  188

1794.‘முழுக் கலின் வலிய நம் மூரி நெஞ்சினை,
மழுக்களின் பிளத்தும்’ என்று, ஓடுவார்; வழி
ஒழுங்கிய கண்ணின் நீர்க் கலுழி ஊற்றிடை
இழுக்கலில் வழுக்கி வீழ்ந்து, இடர் உற்றார் - சிலர்

     சிலர் -;  “முழுக் கலின் வலிய நம் மூரி நெஞ்சினை - பெரிய
கல்லைப் போலவலியதாக உள்ள நமது  கடு மனத்தை;  மழுக்களின்
பிளத்தும்’
- கோடரியால்இரண்டாக்குவோம்;’  என்று  ;  ஓடுவார் -
ஓடுகின்றார்கள்;  வழி ஒழுக்கியகண்ணின் நீர்க் கலுழி ஆற்றிடை -
வழியில் ஒழுகவிடப்பட்ட கண்ணீராகிய கலங்கியநீர்ப்பெருக்காகிய
ஆற்றின்கண்;  இழுக்கலில் - சேற்றில்;  வழுக்கி  வீழ்ந்து- சறுக்கி
விழுந்து;  இடர் உற்றார் - துன்பம் அடைந்தார்.

     கலின் - கல்லின் என்பதன் விகாரம்.  மழு - கோடரி. ஒடுகின்றவர்
தமது  கண்ணீர் ஆற்றுச் சேற்றில் வழுக்கி,  வீழ்ந்தார்கள் என்பதாம்.
இழுக்கல் - சேறு.  “இழுக்கல்  உடையுழி ஊற்றுக்கோல்’  என்னும் குறள்
காண்க. (குறள். 415.)                                          189

1795. பொன் அணி, மணி அணி, மெய்யின் போக்கினர்,
மின் என மீன் என விளங்கும் மெய் விலைப்
பல் நிறத் துகிலினைப் பறித்து நீக்கினர்,
சின்ன நுண் துகிலினைச் செறிக்கின்றார் - சிலர்.*

     சிலர்-;  மெய்யின் - தம் உடம்பிலிருந்து;  பொன் அணி, மணி
அணிபோக்கினர்
- பொன்னாலும்  மணியாலும்  இயன்ற அணிகலன்