களைக் கழற்றி எறிந்தனராகி; மின் என விளங்கும் மெய் - மின்னலைப் போல விட்டுவிளங்கும் தமது உடம்பில்; மீன் என விலைப் பல்நிறத் துகிலினை - விண்மீனைப்போன்ற சிறந்த விலை படைத்த பல நிறமுள்ள உயர்ந்த ஆடைகளைப்; பறித்து நீக்கினர் - பிடித்திழுத்து அப்பால் வீசி எறிந்து; சின்ன நுண்துகிலினைச் செறிக்கின்றார் -சிறிய நுண்ணிய ஆடையை இறுகக் கட்டுகின்றார். இராமன் அணிதுறந்து மரவுரி கொண்டு செல்லும்போது தமக்கு அலங்யையும், மீன்என -ஆடையையும் குறித்ததாகக் கொள்க. 190 | 1796. | ‘நிறை மக உடையவர், நெறி செல் ஐம்பொறி குறை மகக் குறையினும், கொடுப்பராம் உயிர் முறை மகன் வனம் புக, மொழியைக் காக்கின்ற இறைமகன் திருமனம் இரும்பு’ என்றார் - சிலர். |
சிலர்-; ‘நிறை மக உடையவர் - பல பிள்ளைகளை உடையவர்கள்; நெறி செல்ஐம்பொறி குறை - மனத்தின் வழியில் செல்கின்ற ஐம்பொறிகளில் ஒன்றிரண்டு குறைந்து ஊனமுற்ற; மக - பிள்ளை; குறையினும் - அழிந்தாலும்; உயிர் கொடுப்பர் - தங்கள் உயிரைப் போக்கிக்கொள்வர் (இது உலக வழக்கமாகவும்); முறைமகன் வனம் புக- அரச உரிமைக்கு முறையாக உரிய மூத்த பிள்ளை காடு செல்ல; மொழியைக் காக்கின்ற இறைமகன் - வாய்மையைக் காத்து வரம் கொடுத்துள்ள சக்கரவர்த்தியின்; திருமனம்இரும்பு’ - அழகிய மனம் இரும்பாகும்;’ என்றார் - குறை மக - ஊமை, செவிடு, குருடு முதலிய குறை உடைய பிள்ளை. ‘ஆம்’ உரையசை. 191 | 1797. | வாங்கிய மருங்குலை வருத்தும் கொங்கையர், பூங்கொடி ஒதுங்குவபோல், ஒதுங்கினர்; ஏங்கிய குரலினர்; இணைந்த காந்தளின் தாங்கிய செங் கை தம் தலையின்மேல் உளார். | வாங்கிய மருங்குலை - உள்வாங்கிய மெலிந்து வளையும் இடையை; வருத்தும்கொங்கையர் - தமது பாரத்தால் வருத்துகின்ற தனங்களை உடைய அழகிய மகளிர்; பூங்கொடி ஒதுங்குவபோல் ஒதுங்கினர் - மலர் பூத்த கொடி அசைவது போல் ஒதுங்கி; ஏங்கிய குரலினர் - அழுத குரல் உடையதாய்; இணைந்த காந்தனின் - இரட்டையானகாந்தள் மலர்போல்; செங்கை - சிவந்த கையை; தம் தலையின் மேல் தாங்கியஉளார் - தம் தலைகளின் மேல் தாங்கியவராய் உள்ளனர். |