மகளிர் தம் தலைமீது கைவைத்து அழுதவண்ணம் உளர் என்றார். ‘கை தலையின்மீது உளார் பூங்கொடி ஒதுங்குவது போல் ஒதுங்கினர்’ என முடிப்பினும்அமையும். 192 | 1798. | தலைக் குவட்டு அயல் மதி தவழும் மாளிகை நிலைக் குவட்டு இடை இடை நின்ற நங்கைமார், முலைக் குவட்டு இழி கணீர் ஆலி மொய்த்து உக, மலைக் குவட்டு அகவுறு மயிலின் மாழ்கினார். |
தலைக்குவட்டு அயல் - உச்சிச் சிகரத்துக்குப் பக்கத்தில்; மதிதவழும்மாளிகை - சந்திரன் தவழ்ந்து செல்லும் உயர்ந்த மாளிகையினது; நிலைக் குவட்டு இடைஇடை - மேல் நிலை என்னும் உப்பரிகை இடங்கள்தோறும்; நின்ற நங்கைமார் -நின்ற மகளிர்; இழி கணீர். ஆலி முலைக் குவட்டு மொய்த்து உக - இறங்குகின்ற கண்ணீ்ர்த் துளி தமது முலைச் சிகரங்களில் நெருங்கிச் சிந்த; மலைக் குவட்டு -மலைச் சிகரத்தில்; அகவுறு மயிலின் - அகவுகின்ற மயிலைப் போல; மாழ்கினார் - மயங்கினர். மயில் அகவுதல் - கூவுதலாம்; இங்கே மகளிர் அழுதலாம். நிலைக்குவட்டு இடை இடை என்பது ‘பால்கனி’ என்று சொல்லப்படுவதாகவும்கொள்ளலாம். 193 | 1799. | மஞ்சு என அகிற் புகை வழக்கு மாளிகை எஞ்சல் இல் சாளரத்து, இரங்கும் இன் சொலார் அஞ்சனக் கண்ணீன் நீர் அருவி சோர்தர, பஞ்சரத்து இருந்து அழும் கிளியின் பன்னினார். |
மஞ்சு என அகிற் புகை வழங்கும் மாளிகை - மேகம் போன அகிற் புகையானது சஞ்சரிக்கும் மாளிகையினது; எஞ்சல் இல்சாளரத்து - குறைதல் இல்லாத (காற்று வழங்கும்) பலகணி வழியாக (இராமனைக் கண்டு); இரங்கும் இன்சொலார் - வருந்தும் இனியசொல்லினை உடைய மகளிர்; அஞ்சனக் கண்ணின் - மை தீட்டப் பெற்ற கண்ணிலிருந்து; நீர் அருவி சோர்தர - நீர் அருவியாக வழிய; பஞ்சரத்து இருந்து அழும் கிளியின்- கூட்டின்கண் இருந்து அழுகின்ற கிளியைப் போல; பன்னினார் - சொன்னதையே சொல்லிச் சொல்லிப் புலம்பினார். பலகணி வழியாகத் தலைகாட்டி அழும் மகளிர் கூட்டில் இருந்து அழும் கிளி, போன்றனர்என்க. பன்னுதல் - திரும்பத் திரும்பச் சொல்லுதல், கிளி சொன்னதைத் திரும்பத் திரும்பச்சொல்லும் ஆதலின் இங்கே பன்னுதலுக்கும் உவமையாயிற்று. 194 |