பக்கம் எண் :

294அயோத்தியா காண்டம்

     காமரம் கனிந்து  என - காமரம் என்னும் பண் முற்றிப்
பழுத்தாற்போல; கனிந்த மென் மொழி - இனிய மென்மையான பேச்சினை
உடைய; மா மடந்தையர் எலாம் - பெருமயுற்ற மகளிர் எல்லாரும்; மறுகு
சேர்தலால்
- வீதியை அடைந்தபடியால்;  தவளமாடம் - வெண்ணிற
மாளிகைகள்;  தே மரு நறுங்குழல் திருவின் நீங்கிய தாமரை ஒத்தன-
தேன் பொருந்திய நறுமணம் வீசும் சுடர் தலை உடைய திருமகளை விட்டுப்
பிரிந்த தாமரைமலர்போல் ஆயின.

     காமரம்  என்பது  பண் நிரம்பினாற் போன்ற பேச்சு.  மகளிர்
போனபடியால் வெறுமைஅடைந்த மாளிகையைத் திருமகள் நீங்கிய
தாமரைபோல் என்றார்.  தவளம் - வெண்மை.“திருப்புறக் கொடுத்த
செம்பொன் தாமரை  போன்று கோயில்,  புரிக்குழல மடந்தை போகப்
புலம்பொடு மடிந்த அன்றே”  என்ற  சிந்தாமணி (560) இங்கு ஒப்பு
நோக்கற்குரியது.  ‘ஏ’ காரம்ஈற்றசை.                              197

1803.மழைக் குலம் புரை குழல் விரிந்து மண் உற,
குழைக் குல முகத்தியர் குழாம் கொண்டு ஏகினர் -
இழைக் குலம் சிதறிட, ஏவுண்டு ஓய்வுறும்
உழைக் குலம் உழைப்பன ஒத்து, ஓர் பால் எலாம்.

     ஓர் பால் எலாம் - ஒரு பக்கத்தில் எல்லாம்;  ஏ உண்டு - அம்பு
பட்டு; ஒய்வுறும் - சோர்வடைந்து இறக்கும் நிலை எய்திய; உழைக்குலம் -
மான்கூட்டம்;  உழைப்பன ஒத்து - துடித்து வருந்துவன போல்;
இழைக்குலம் சிதறிட- அணிகலன்கள் கீழே சிந்த;  மழைக்குலம் புரை
குழல்
- மேகக் கூட்டம் ஒத்த கூந்தல்;விரிந்து மண் உற - அவிழ்ந்து
தரையில் புரள; குழாம் கொண்டு - கூட்டமாகி; ஏகினார் - சென்றார்கள்.

    தோடு எனப் பொருள் கூறினோம் ஆயினும் குழை என்பது
தொங்கலாக இடப்பெற்ற காதணியைக்குறிக்கும். தோடு - செறித்த
காதணியாம். கோடு - பனை யோலை, குழை - தளிர் என இவற்றை ஒப்பு
நேரிக்கி அமைந்த பெயர்கள்.                                   198

நகரின் பொலிவு அழிதல்  

1804.கொடி அடங்கின மனைக் குன்றம்; கோ முரசு
இடி அடங்கின; முழக்கு இழந்த பல் இயம்;
படி அடங்கலும், நிமிர் பசுங் கண் மாரியால்,
பொடி அடங்கின, மதில் புறத்து வீதியே.,

     மனைக்குன்றம் - மனைகளாகிய மலைகளில்; கொடி அடங்கின -
கொடிகள் அடங்கிப் போயின; கோ முரசு- அரச முரசம்; இடி அடங்கின-
ஒலித்தல்இல்லாமற் போயின; பல் இயம் - பல வாத்தியங்கள்; முழக்கு
இழந்த
- ஒலியைஇழந்தன; படி அடங்கலும் - பூமி