பக்கம் எண் :

நகர் நீங்கு படலம் 297

     அரச வீதி - அரசர்களுக்குரிய வீதிகள்; முழவு எழும் ஒலி இல -
தண்ணுமையிலிருந்து உண்டாகும் ஒலிகள் இல; முறையின் - இசை
முறைப்படி; யாழ் நரம்புஎழ - யாழின் கண் நரம்பு எழுப்ப; எழும் ஒலி
இல -
எழுகின்ற ஒலிகள் இல;  இமைப்பு இல் கண்ணினர் - இமையாக்
கண்ணினராய தேவர்களது; விழவு -விழாவிற்காக;  எழும் ஒலி இல -
உண்டாகின்ற ஒலிகளும் இல; அழ எழும் ஒலி அலது வேறும் ஒன்று
இல -
அழுவதனால் உண்டாகின்ற கூக்குரல் ஓசை அல்லாமல் வேறு ஓர்
ஒலிஇலவாயின.

     முழவு - மத்தளம். தண்ணுமை குடமுழா என்பன ஒரு நிகரன. முறை
என்பது பண்ணாகும்.தேவர்களுக்குச்  செய்யும்  திருவிழாக்களும் நின்று
போயின. கேட்க வேண்டிய ஓசைகள்கேட்கவில்லை; கேட்கத் தகாத ஓசை
மட்டுமே  கேட்டது.                                     204

1810.தெள் ஒளிச் சிலம்புகள் சிலம்பு பொன் மனை
நள் ஒலித்தில; நளிர் கலையும் அன்னவே;
புள் ஒலித்தில, புனல்; பொழிலும் அன்னவே;
கள் ஒலித்தில, மலர்; களிறும் அன்னவே.*

     தென் ஒலிச் சிலம்புகள் சிலம்பு பொன்மனை - தெளிந்த
ஒலியையுடைய காற்சிலம்புகள் இடையறாது  ஒலிக்கின்ற அழகிய வீடுகள்
(இப்போது);  நள் ஒலித்தில -நள்ளென்ற ஓசை உடையவாய்
ஒலிக்கவில்லை;  நளிர் - செறிந்த;  கலையும் அன்ன- மேகலை
அணிகளும் ஒலிக்கா ஆயின; புனல் - நீரில்; புள் ஒலித்தில -பறவைகள்
ஒலிக்கவில்லை; பொழிலும் - சோலைகளும்; அன்ன - அதுபோலப் புள்
ஒலிக்கா ஆயின; மலர் - பூக்களில்; கள் - வண்டுகள் ஒலித்தில; களிறும்-
யானைகளும் (மதநீர் படாமையால்);  அன்ன - அதுபோல வண்டுகள்
ஒலிக்காவாயின.

     சிலம்பு, மேகலை அணிவாரும்  இயங்குவாரும் இல்லை. பறவைகள்
அடங்கின. வண்டுகளும்ஓடுங்கின என்றார். ‘ஏ’ காரங்கள் அசை.      205

1811.செய்ம் மறந்தன புனல்; சிவந்த வாய்ச்சியர்
கைம் மறந்தன, பசுங் குழவி; காந்து எரி
நெய்ம் மறந்தன; நெறி அறிஞர் யாவரும்
மெய்ம் மறந்தனர்; ஒலி மறந்த, வேதமே.

     புனல் - நீரை;  செய்ம்  மறந்தன - வயல்களை மறந்து  விட்டன;
பசுங்குழவி - இளங் குழந்தைகளை;  சிவந்த வாய்ச்சியர் கை - சிவந்த
வாயுடையதாய் மகளிர் கைகள்; மறந்தன்- மறந்து போயின; காந்து எரி-
விளங்கும்வேள்வித் தீ;  நெய்ம் மறந்தன - நெய்யை மறந்து போயின;
நெறி அறிஞர் யாவரும்- சாத்திரம் அறிந்த ஞானிகள்