| அனைவரும்; மெய்- தத்துவப் பொருளை; மறந்தனர்-மறந்து போயினர்; வேதம்-, ஒலி மறந்த- ஒலித்தலை மறந்து போயின. வயலுக்கு நீர் பாய்ச்சுவார் இல்லை. குழந்தைகள் பால் உண்ணவில்லை. வேள்விகள் நடைபெறவில்லை. சாத்திர விசாரணை செய்வாரில்லை. வேதபாராயணங்கள் நடைபெறவில்லை என்பதாம். ‘ஏ’ காரம் ஈற்றசை. 206 | 1812. | ஆடினர் அழுதனர்; அழுத ஏழ் இசை பாடினர் அழுதனர்; பரிந்த கோதையர், டினர் அழுதனர்; உயிரின் அன்பரைக் கூடினர் அழுதனர் - குழாம் குழாம்கொடே. |
குழாம் குழாம் கொடு-கூட்டம் கூட்டமாகத் திரண்டு; ஆடினர்- நடனம்ஆடிக் கொண்டிருந்தவர்கள்;அழுதனர்-; அமுத ஏழ் இசை- அமுதம் போன்ற இனியஏழு சுரங்களை;பாடினர் அமுதனர்- பாடிக்கொண்டிருந்தவர்கள் அழுதனர்;பரிந்தகோதையர் ஊடினர்- அறுத்து வீசிய மாலையராய் ஊடிக்கொண்டிருந்தவர்கள்;அழுதனர்-; உயிரின் அன்பரைக் கூடினர்- உயிர்போலச் சிறந்த காதலரைக் கூடிய மகளிர்; அழுதனர்-. வெவ்வேறு இன்பமான தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள் அத்தொழிலைக் கைவிட்டு அழுதனர்என்பதாம். ‘ஏ’ ஈற்றசை. 207 | 1813. | நீட்டில, களிறு கை நீரின்; வாய் புதல் பூட்டில, புரவிகள்; புள்ளும், பார்ப்பினுக்கு ட்டில இரை; புனிற்று ஈன்ற கன்றையும் ட்டில, கறவை; நைந்து உருகிச் சோர்ந்தவே. |
களிறு- யானைகள்; நீரின்- நீரில்; கை நீட்டில-துதிக்கையை நீட்டவில்லை; புரவிகள்- குதிரைகள்; வாய்- வாயில்; புதல்- புல்; பூட்டில- பூட்டப்பெறவில்லை;புள்ளும்- பறவைகளும்; பார்ப்பினுக்கு- தம் குஞ்சுகளுக்கு;இரை ஊட்டில- இரை உண்பிக்கவில்லை;கறவை- பசுக்கள்;புனிற்று- ஈன்றணிமையான; ஈன்ற கன்றையும்- தாம்பெற்ற கன்றையும்;ஊட்டில-பால் ஊட்ட விடவில்லை;நைந்து உருகிச் சோர்ந்த- தேய்ந்து இரங்கிச் சோர்ந்தன. யானைகள் நீர்உண்ணவில்லை என்பதை துதிக்கையைப் புனலின் நீட்டில என்றார். புதல்-புல். புல், கொள் நிறைந்த பையினைக் குதிரை வாயில் மாட்டித் தின்னச் செய்வது வழக்கம்.ஆதலின், ‘புதல் பூட்டில’ என்றார். ‘ஏ’ காரம் ஈற்றசை. 208 | 1814. | மாந்தர்தம் மொய்ம்பினின், மகளிர் கொங்கை ஆம் ஏந்து இளநீர்களும் வறுமை எய்தின, |
|