படிந்த உடம்பு உடையவராய்; புடை வந்து பொரும - பக்கத்தில் வந்து விம்மியழ; பழுது சீரையின் உடையினன் - அழகற்ற மரவுரி உடை உடையவனாய்; வரும்படி -(இராமன்) வரும்தன்மையை; பாரா - பார்த்து; எழுது பாவை அன்னாள் -சித்திரத்தில் எழுதப் பெற்ற பாவையை ஒத்த சீதை; துணுக்கமொடு - மனத்தில்வெருவுதலுடனே; எழுந்தாள் -. இதுகாறும் காணாததும் எதிர்பாராததுமான காட்சியைக் கண்டாள் ஆதலின, சீதைக்குத்திடுக்கீடு நிகழ்ந்தது. 214 சீதை இராமனை வினாவுதல் 1820. | எழுந்த நங்கையை, மாமியர் தழுவினர்; ஏங்கிப் பொழிந்த உண் கண் நீர்ப் புதுப் புனல் ஆட்டினர்; புலம்ப, அழிந்த சிந்தையள் அன்னம், ‘ஈது இன்னது’ என்று அறியாள்; வழிந்த நீர் நெடுங் கண்ணினள், வள்ளலை நோக்கி, |
எழுந்த நங்கையை - (கணவனை நோக்கி) எழுந்த சீதையை; மாமியர் -; தழுவினர் - தழுவிக்கொண்டு; ஏங்கி - அவலித்து; பொழிந்த உண்கண் நீர்ப்புதுப்புனல் ஆட்டி - சிந்திய மையுண்ட கண்களிலிருந்து வரும் நீராகிய புதிய நீரில்நீராட்டி; புலம்ப - வருந்த; அழிந்த சிந்தையள் அன்னம் - அதனால்கெட்டழிந்த மனம் உடையளாய சீதை; ஈது இன்னது என்று அறியாள் - இதற்குக்காரணம் இன்னது என்று அறியாதவளாய்; வழிந்த நீர் நெடுங் கண்ணினள் - வழிகின்ற நீரினை உடைய நீண்ட கண்களோடு; வள்ளலை நோக்கி - இராமனைப் பார்த்து, இதுகாறும் அழுகையை அறியாதவர் அழுத கண்ணீராதலின ‘புதுப்புனல்’ என்றார். இது குளகச்செய்யுள். 215 கலிவிருத்தம் 1821. | ‘பொன்னை உற்ற பொலங் கழலோய்! புகழ் - மன்னை உற்றது உண்டோ, மற்று இவ் வன் துயர் என்னை உற்றது? இயம்பு’ என்று இயம்பினாள் - |
|