| மின்னை உற்ற நடுக்கத்து மேனியாள். |
மின்னை உற்ற நடுக்கத்து மேனியாள் - மின்னலை ஒத்த நடுங்குகின்ற உடம்பினைஉடையளாகிய சீதை; ‘பொன்னை உற்ற பொலங்கழலோய்! - பொன்னால் செய்த பொலிவானவீரக்கழலை அணிந்தவனே; புகழ் மன்னை - கீர்த்தி உடைய சக்கரவர்த்தியை; உற்றது உண்டோ? - நேரிட்ட துன்பம் ஏதேனும் உளதோ; மற்று - அப்படிஇல்லையாயின்; இவ் வன்துயர் உற்றது என்னை - இக் கொடிய துன்பம் வந்தது எதனால்; இயம்பு - சொல்லுக;' என்று இயம்பினாள் - என்று கேட்டாள். மாமியார் அழுதபடியால் சக்கரவர்த்திக்கு ஏதேனும் தீங்கண்டோ என்று வினாவினாள்.மற்று, வினைமாற்று. 216 இராமன் பதில் 1822. | ‘பொரு இல் எம்பி புவி புரப்பான்; புகழ் இருவர் ஆணையும் ஏந்தினென்; இன்று போய், கருவி மா மழைக் கல் - கடம் கண்டு, நான் வருவென் ஈண்டு; வருந்தலை நீ என்றான். |
‘பொரு இல் எம்பி புவி புரப்பான் - ஒப்பற்ற என் தம்பியாகிய பரதன் பூமியைக்காப்பாற்றி அரசாள்வான்; புகழ் - புகழ்தற்குரிய; இருவர் ஆணையும் ஏந்தினென் -தந்தை, தாய் இருவரது கட்டளையையும் தலைமேல் தாங்கினேன்; நான் இன்று போய் -நான் - இன்றே புறப்பட்டுச் சென்று; கருவி மாமழைக் கல்தடம் கண்டு - தொகுதியான சிறந்த மேகம் நிரம்பிய மலை வழிகளை உடைய காட்டைப் பார்த்து; ஈண்டு வருவென் -இங்கே வருவென்; நீ வருந்தலை’ - நீ வருத்தமுறாதே; என்றான்-. ‘கருவி’ - இடி, மின்னல் முதலியவற்றை உடைய தொகுதி என்று பொருள். ‘கருவி தொகுதி’(தொல். சொல்.354) “கருவி வானம்” (அகநா.4:6) என்பது காண்க. சீதைக்கு வருத்தம்மிகாது இருக்க ‘இன்று போய்க் கண்டு வருவென்’ என்றான். 217 சீதையின் துயர் 1823. | நாயகன் வனம் நண்ணல் உற்றான் என்றும், மேய மண் இழந்தான் என்றும், விம்மலள்; ‘நீ வருந்தலை; நீங்கவென் யான்’ என்ற தீய வெஞ் சொல் செவி சுடத் தேம்புவாள். |
|