பக்கம் எண் :

306அயோத்தியா காண்டம்

நின் பிரிவினும் -உன் பிரிவு சுடுவதைக் காட்டிலும்; பெருங்காடு -
உன்னுடன் நான் வரும் அப்பெரிய காடு; சுடுமோ?’ - என்னைச் சுடுமோ;’
என்றாள் -.

     உன்னால்  வரும்  பிரிவுத் துயராகிய வெப்பத்துக்கு ஊழிக்காலத்துச்
சூரிய வெப்பமும்நிகராகாது;  எனவே, ‘பிரிவினும் சுடுமோ பெருங்காடு’
என்றாள்.  ‘பெருங்காடு  இன்னாஎன்றீராயின்.  இனியவோ பெரும 
தமியேற்கு  மனையே’ (குறுந். 124) என்பதும் காண்க.               222

1828.அண்ணல், அன்ன சொல் கேட்டனன்; அன்றியும்,
உள் நிவந்த கருத்தும் உணர்ந்தனன்;
கண்ணின் நீர்க் கடல் கைவிட நேர்கிலன்,
எண்ணுகின்றனன், என் செயற்பாற்று?’ எனா,

     அண்ணல் - இராமன்;  அன்ன சொல் கேட்டனன் - அவள்
சொன்ன அத்தகையவார்த்தையைக் கேட்டான்; அன்றியும் - அதன்
மேலும்;  உள் நிவந்த கருத்தும் உணர்ந்தனன் - அவள் மனத்தில்
தலை எடுத்த நினைவையும் உணர்ந்துகொண்டான்; கண்ணின்நீர்க்கடல்-
உடன்படாதவனாய்;  ‘என்செயற்பாற்று’ எனா - செய்தற்குத்தகுதியானது
யாது  என்று; எண்ணுகின்றனன் - சிந்திப்பானானான்.

     ‘அயோத்தியில் உள்ள கண்ணீர்க் கடலின் இடையே அவளைக்
கைவிட  உடன்படாது’ என்றும்பொருள் கூறலாம். சொல்லும் சிந்தனையும்
ஒன்றாக இருப்பது  உணர்ந்து  சிந்திப்பான் ஆயினன்இராமன்.       223

சீதை மரவுரி அணிந்து இராமன்பால் வந்து நிற்றல்  

1829.அனைய வேலை, அக மனை எய்தினள்;
புனையும் சீரம் துணிந்து புனைந்தனள்;
நினைவின், வள்ளல் பின் வந்து, அயல் நின்றனள்-
பனையின் நீள் கரம் பற்றிய கையினாள்.

     அனைய வேலை - அப்பொழுது;  அகமனை எய்தினள் -
மாளிகைக்குள்ளேசென்றாள்; புனையும் சீரம் - உடுத்தற்குரிய  மரவுரியை;
துணிந்து - (செய்யத்தக்கது இதுதான் என எண்ணி) உறுதிசெய்துகொண்டு;
புனைந்தனள் - உடுத்திக் கொண்டு; நினைவின் - உடன் போம்
கருத்தோடு;  வள்ளல் பின் வந்து - இராமனுக்குப்பின்புறமாக வந்து;
அயல் - அருகிலே; பனையின் நீள்கரம் பற்றிய கையினாள் -
பனைபோன்று நீண்ட இராமனது கையைப் பற்றிக் கொண்ட செயலினளாய்;
நின்றனள்-