பக்கம் எண் :

நகர் நீங்கு படலம் 307

     ‘நினைவின்’ என்பதற்கு நினையும் மாத்திரத்து  எனக் கூறி,  இராமன்
சிந்திக்குமளவிலேயேஅவ்வளவு விரைவாக  மரவுரி  உடுத்தி அயல் வந்து
நின்றாள் எனலும் ஆம்.  கையினள் - செயலினள்(கை - செய்கை)
எண்ணல்,  துணிதல்,  செய்தல்  மூன்றும் பிராட்டியிடத்து  விரைந்து
நிகழ்ந்தன.                                                  224

சீதையைக் கண்டோர் வருத்தம்  

1830. ஏழைதன் செயல் கண்டவர் யாவரும்
வீழும் மண்ணிடை வீழ்ந்தனர்; வீந்திலர்;
வாழும் நாள் உள என்றபின் மாள்வரோ? -
ஊழி பேரினும் உய்குநர் உய்வரே!

     ஏழை தன் செயல் - சீதையின் மரவுரி  உடுத்த செயலைக்;
கண்டவர்  யாவரும் -பார்த்த எல்லோரும்; வீழும் மண்ணிடை
வீழ்ந்தனர்
- இறத்தற்கு இடமான நிலத்தில்விழுந்தார்கள்; வீந்திலர் -
இறக்கவில்லை;  வாழும்  நாள் உள என்றபின் -ஆயுள் நாள் இன்னும்
இருக்குமானால் அவர்கள்;  மாள்வரோ? -  இறப்பார்களோ; ஊழி
பேர்கினும் -
பிரளயமே  நேரிட்டாலும்;  உய்குநர் உய்வர் - பிழைக்கும்
விதி உள்ளவர் பிழைப்பர்.

     மிக்க சோகமும்  உயிர்த்துடிப்பும்  நிகழ்ந்தது  கண்டவர்  வீழ்ந்து
இறக்காமைக்குக்காரணம் அவர்களுக்கு ஆயுள் உள்ளமையே அன்றி
வேறன்று  என்றார். வேற்றுப்பொருள் வைப்பணி. ‘ஏ’காரம் ஈற்றசை.   225

1831.தாயர், தவ்வையர், தன் துணைச் சேடியர்,
ஆயம் மன்னிய அன்பினர் என்று இவர்
தீயில் மூழ்கினர் ஒத்தனர்; செங்கணான்
தூய தையலை நோக்கினன், சொல்லுவான்;

     தாயர் -;  தவ்வையர் - தமக்கைமார்கள்;  தன்துணைச் சேடியர் -
சீதைக்குத் துணையாகிய தோழிப் பெண்கள்; ஆயம் மன்னிய அன்பினர்-
தோழியர்கூட்டமாக  உள்ள அன்பினை உடையவர்கள்;  என்று  இவர் -;
தீயில் மூழ்கினர் ஒத்தனர் -
நெருப்பில் விழுந்து முழுகியவர்களைப்
போன்று ஆனார்கள்; செங்கணான் - சிவந்தகண்களை உடைய இராமன்;
தூய தையலை நோக்கினன் சொல்லுவான் - கற்பிற் சிறந்தசீதையைப்
பார்த்துச் சொல்லுகின்றான்;

     ஆடவர்க்குச் செங்கண் கூறல் வழக்கு. நோக்கினன்-முற்றெச்சம்.  226

இராமன் சீதை உரையாடல்  

1832.‘முல்லையும் கடல் முத்தும் எதிர்ப்பினும்,
வெல்லும் வெண் நகையாய்! விளைவு உன்னுவாய் -