| அல்லை; போத அமைந்தனை ஆதலின், எல்லை அற்ற இடர் தருவாய்’ என்றான். |
‘முல்லையும் கடல் முத்தும் எதிர்ப்பினும் - முல்லை அரும்பும், கடலில் விளைந்தமுத்தும் போட்டியிட்டாலும்; வெல்லும் வெண்நகையாய்!- அவற்றை வெல்லுகின்ற வெள்ளியபற்களை உடையவளே; விளைவு உன்னுவாய் அல்லை - (உடன் வருதலால்) உண்டாகக் கூடியதீமையைக் கருதுகின்றாயில்லை; போத அமைந்தனை - உடன் வருதற்குச் சித்தமாய்விட்டாய்; ஆதலின் -; எல்லை அற்ற - அளவற்ற; இடர் தருவாய்’ - துன்பங்களை உண்டாக்குவாய்;’ என்றான் -. எதிரது நோக்கிக் கூறியது. உன் கால்கள் மென்மையானவை என்று கூறிமுன் மறுத்தவன்இப்போது ‘நீ காட்டிற்கு வருதலால் கணக்கற்ற தீங்கு விளையும்’ என்று கூறி மறுக்கலானான்.பெண்டிர் உடன்வரின் அவர்களைக் காத்தல் முதலிய முயற்சிகளில் பல தீமைகளைச் சந்திக்க நேரும் என்பது இராமன் கணிப்பு. 227 1833. | கொற்றவன் அது கூறலும், கோகிலம் செற்றது அன்ன குதலையள் சீறுவாள், ‘உற்ற நின்ற துயரம் இது ஒன்றுமே’ என்- துறந்தபின், இன்பம் கொலாம்?’ என்றாள். |
கொற்றவன் - அரசனாகிய இராமன்; அது கூறலும் - அச்சொல் சொல்லுதலும்; கோகிலம் செற்றது அன்ன குதலையள் - குயில் கோபம் கொண்டது போன்றகுதலைப் பேச்சினை உடைய சீதை; சீறுவாள் - கோபித்து; ‘உற்ற நின்ற துயரம் இது ஒன்றுமே? - உம்மை அடைந்து நின்ற துன்பம் நான் உடன் வருவதாகிய இது ஒன்றுதானோ; என் துறந்த பின் இன்பம் கொல்’ - என்னை இங்கேயே விட்டு விட்டுப் போனபிறகு காட்டில் உங்களுக்கு இன்பமே உண்டாகும் போலும்;’ என்றாள் -. குதலை - பொருள் தெரிந்து சொல் தெரியாதது. ‘ஆம்’ உரையசை. ‘கொல்’ ஐயம். 228 இராமன் புறப்பாடு 1834. | பிறிது ஓர் மாற்றம் பெருந்தகை பேசலன்; மறுகி வீழ்ந்து அழ மைந்தரும் மாதரும் செறுவின் வீழ்ந்த நெடுந் தெருச் சென்றனன் - நெறி பெறாமை அரிதினின் நீங்குவான்.1 |
|