பக்கம் எண் :

தைலம் ஆட்டு படலம் 315

1844.அந்தியில் வெயில் ஒளி அழிய, வானகம்,
நந்தல் இல் கேகயன் பயந்த நங்கைதன்,
மந்தரை உரை எனும் கடுவின் மட்சிய
சிந்தையின் இருண்டது, செம்மை நீங்கியே.

     வானகம் - ஆகாயம்;  அந்தியில் - மாலைக் காலத்தில்; வெயில்
ஒளி அழிய -
சூரியனது ஒளி இல்லாமற் போக; நந்தல் இல் - கெடுதல்
இல்லாத; கேகயன் பயந்த நங்கைதன் - கேகய நாட்டரசன் புதல்வியாகிய
கைகேயியினுடைய;  மந்தரை உரை எனும் கடுவின்- மந்தரைக் கூனியின்
வார்த்தை என்னும் நஞ்சால்; மட்கிய -மங்கிப் போன (நிலை கெட்ட);
சிந்தையின் - மனம் போல; செம்மை நீங்கி -செம்மைத் தன்மை போய்;
இருண்டது - இருளடைந்தது.

     கூனி வார்த்தையால் நெறிகெட்ட கைகேயியின் இருளடைந்த மனம்
போல வானம் செம்மைநீங்கி,  ஒளி குன்றி இருளடைந்தது  என்றார்.
அங்கே இருள் - வஞ்சனை,  செம்மை - நேர்மை. வானத்தின் செம்மை
செவ்வானத்தின் செம்மை - எனக் கொள்க.  ‘ஏ’ காரம் ஈற்றசை.         5

1845.பரந்து மீண் அரும்பிய பசலை வானகம்,
அரந்தை இல் முனிவரன் அறைந்த சாபத்தால்,
நிரந்தரம் இமைப்பு இலா நெடுங் கண் ஈண்டிய
புரந்தரன் உரு எனப் பொலிந்தது எங்குமே.

     மீன் - நட்சத்திரங்கள்;  பரந்து  அரும்பிய - தோன்றி எங்கும்
பரவியுள்ள;  பசலை வானகம் - விளர்த்த ஆகாயம்;  எங்கும் -
எல்லாவிடத்தும்;  அரந்தை இல் - துன்பம் இல்லாத;  முனிவரன்
அறைந்த சாபத்தால்-
கோதமன் என்னும் முனிவன் கூறிய சாப
மொழியால்;  நிரந்தரம் - எப்பொழுதும்; இமைப்பு இலா நெடுங்கண் -
இமைத்தல் இல்லாத பெரிய கண்கள்;  ஈண்டிய -நெருங்கி அமைந்த; 
புரந்தரன் உரு என - இந்திரனது  உடம்பைப் போல;  பொலிந்தது-
விளங்கியது.

     இந்திரன் சாபம் பெற்ற  வரலாறு  அகலிகைப் படலத்துக் கூறப்
பெற்றது.  வானம் இந்திரன்உடம்பு;  விண்மீன்கள் இந்திரன் உடம்பில்
உள்ள கண்கள் என உவமை காண்க.  ‘ஏ’ஈற்றசை.                   6

முனிவர்களோடு இராமன் தங்கல்  

1846.திரு நகர்க்கு ஓசனை இரண்டு சென்று, ஒரு
விரை செறி சோலையை விரைவின் எய்தினான்;