இழப்ப எய்தினும் -செல்வம் எல்லாம் இழக்கும்படி நேர்ந்தாலும்; அறம் துறப்பிலர்- அறத்தைக்கைவிடாதவர்; எனல்- எனச் சொல்லப் பெறுவதே ஆகும்.’ போரில் படை ஏற்பது சூரத்தனம் அன்று. வாழ்வில் அறத்தின் வழி மனம் தளராது நிற்றலே யாரும் என்றார்., ‘சிதைவிடத்து ஒல்கால் உரவோர்’ (குறள். 597.) காண்க. ‘அரோ’ , ‘ஏ’ அசைகள். 29 | 1869. | ‘கான்புறம் சேறலில் அருமை காண்டலால், வான் பிறங்கிய புகழ் மன்னர் தொல் குலம், யான் பிறந்து, அறத்தினின்று இழுக்கிற்று என்னவோ?- ஊன் திறந்து உயிர் குடித்து உழலும் வேலினாய்! |
‘ஊன் திறந்து உயிர் குடித்து உழலும் வேலினாய்! - (பகைவரது) உடலைத் திறந்துஉயிரைக் குடித்துத் திரியும் வேலை உடையவனே!; கான் புறம் சேறலில் அருமை காண்டலால் -காட்டின் புறத்தே செல்லுதலால் உண்டாகும் அருமையை (துன்பத்தை) நினைத்து (நான்)திரும்புதலால்; வான் பிறங்கிய புகழ் மன்னர் தொல் குலம் - வானளாவிய புகழ் பெற்ற மன்னர்களாற் சிறந்த பழைமையான நம் குலம்; யான் பிறந்து அறத்தினின்று இழக்கிற்று -யான் பிறந்த படியால் அறத்திலிருந்து தவறியது; என்னவோ?’ - என்று எல்லாராலும்சொல்லப்படவோ.’ வனவாசத்தின் அருமை கருதித் திரும்பினால் பழி வரும், புகழ் கெடும் என்றானாம். 30 | 1870. | ‘ “வினைக்கு அரு மெய்ம்மையின் வனத்து விட்டனன், மனக்கு அரும் புதல்வனை” என்றல் மன்னவன் - தனக்கு ‘அருந்தவம்; அது தலைக்கொண்டு ஏகுதல் எனக்கு அருந் தவம்; இதற்கு இரங்கள். எந்தை! நீ. |
‘எந்தை -; வினைக்கு அரு மெய்ம்மையன் - செய்தற்கு அரிய சத்தியத்தை உடையதயரதன்; “மனைக்கு அரும் புதல்வனை - தன் |