பக்கம் எண் :

தைலம் ஆட்டு படலம் 331

என் தம்பியாகிய பரதன்பாலும் வைக்க வேண்டும் என்று நிற்குமாறு செய்து;
பின் -
பிறகு....

     அடுத்த செய்யுளில் முடியும் முதலில் வரத்தை வாங்கிக்கொண்டு
பின்னர் அவ்வரம் இன்னதுஎன்று கூறித் தம்பிபால் அருளை நிறுவுக
என்றது  ஒரு நயம்.                                           35

1875.‘ “ஏழ் - இரண்டு ஆண்டும் நீத்து,
     ஈண்ட வந்து உனைத்
தாழ்குவென் திருவடி;
     தப்பிலேன்” எனச்
சூழி வெங் களிற்று இறை
     தனக்குச் சோர்வு இலா
வாழி மா தவன் சொலால்
     மனம் தெருட்டுவாய்.

     ‘ஏழ் இரண்டு ஆண்டும் நீத்து - பதினான்னு ஆண்டுகளும் கழித்து;
ஈண்ட வந்து -விரைவாக வந்து;  உனைத் திருவடி தாழ்குவென் -
உனது  திருவடிகளை வணங்குவேன்; தப்பிலேன் - தவற மாட்டேன்’;
என - என்று;  சூழி - முகபடாம் அணிந்த; வெங்களிற்று இறை
தனக்குக் -
கொடிய யானையை உடைய தயரத மன்னனுக்குச் சொல்லி;
சோர்வு இலா - தளர்ச்சி இல்லாத;  மாதவன் சொலால் - வசிட்ட
முனிவன்சொல்லால்;  மனம் தெருட்டுவாய் - மனத்தைத் தெளிவிப்பாய்.’

‘வாழி’ அசை.                                            36

1876. ‘முறைமையால் எற் பயந்
     தெடுத்த மூவர்க்கும்
குறைவு இலா என் நெடு
     வணக்கம் கூறி, பின்
இறைமகன் துயர் துடைத்து
     இருத்தி, மாடு’ என்றான் -
மறைகளை மறைந்து போய்
     வனத்துள் வைகுவான்.

     மறைகளை மறைந்து  போய் - வேதங்களுக்கு எட்டாமல்  மறைந்து
நின்று; வனத்துள் வைகுவான் - எடுத்த அவதாரத்திற்கேற்ப வனத்தின்கண்
வசிப்பவனாகிய இராமன்; என் பயந்து எடுத்த மூவர்க்கும் - என்னைப்
பெற்றெடுத்த தாயர்;  மூவர்க்கும்  -மூன்று பேர்க்கும்; முறைமையால் -
முறைமைப்படி;  குறைவு இலா - சிறிதும்