கருதி அரக்கர்களை வதம் செய்யும் பெருமானது நோக்கம் நிறை வேற வேண்டித் தான் சிறை புகுந்து மற்றவர்களை வாழ்விக்க வனம் செல்லத் துணிந்தனள் ஆதலின் ‘வாழ்வினை நோக்கி’ என்பதுசீதைக்குப் பொருந்துமாறு அறிந்து இன்புறலாம். 38 | 1878. | அன்னவள் கூறுவாள், ‘அரசர்க்கு, அத்தையர்க்கு, என்னுடைய வணக்கம் முன் இயம்பி, யானுடைப் பொன் நிறப் பூவையும், கிளியும், போற்றுக என்று உன்னும் என் தங்கையர்க்கு உணர்த்துவாய்’ என்றாள். |
அன்னவள் - சிதை; கூறுவாள் - (சுமந்திரனிடம் செய்தி) சொல்லுவாளாகி;‘அரசர்க்கு, அத்தையர்க்கு - தசரதரிடத்தும் மாமியாரிடத்தும்; என்னுடை வணக்கம்முன் இயம்பி - எனது வணக்கத்தை முதலிற் சொல்லி (பிறகு); யான் உடை -என்னுடைய; பொன் நிறப் பூவையும் - பொன்னிறமான நாகணவாய்ப் புள்ளையும்; கிளியும் - கிளியையும்; போற்றுக - பாதுகாக்க; என்று -; உன்னும் - என்னை நினைக்கின்ற; என் தங்கையர்க்கு - என் சகோதரிகளிடம்; உணர்த்துவாய்’ -சொல்லுவாய்;’ என்றாள் -. சீதையின் பேதைமைத் தன்மையை இவ் வார்த்தைகள் விளக்கி நின்று இத்தகைய குழந்தைத்தன்மையுடையாள் பின் வனம் புகுந்து எவ்வளவு உயர்ந்த மனவளர்ச்சியும் குண வளர்ச்சியும்பெற்றுத் திகழ்கிறாள் என்பதை அறிந்துகொள்ள உதவுகிறது. தங்கையர் - ஊர்மிளை, மாண்டவி, சுருத கீர்த்தி ஆகியோர் - இவர் ஜனகன் புதல்வியர். இலக்குவன், பரதன், சத்துருக்கனன் மனைவியளர் ஆவர். 39 இராமன் தேற்றவும் சுமந்திரன் விம்முதல் | 1879. | தேர் வலான், அவ் உரை கேட்டு, ‘தீங்கு உறின் யார் வலார்? உயிர் துறப்பு எளிது அன்றே?’ எனாப் போர் வலான் தடுக்கவும், பொருமி விம்மினான் - சோர்வு இலாள் அறிகிலாத் துயர்க்குச் சோர்கின்றான். |
தேர் வலான் - சுமந்திரன்; அவ் உரை கேட்டு - சீதை சொன்ன |