பக்கம் எண் :

தைலம் ஆட்டு படலம் 335

இலக்குவன் சொன்ன செய்தி  

1881. ‘உரைசெய்து எம் கோமகற்கு
     உறுதி ஆக்கிய
தரைகெழு செல்வத்தைத்
     தவிர, மற்று ஒரு
விரை செறி குழலிமாட்டு
     அளித்த மெய்யனை
அரைசன் என்று இன்னம் ஒன்று
     அறையற் பாலதோ?

     ‘எம் கோமற்கு - எம் தலைவனாகிய இராமனுக்கு; உரை செய்து -
இவ்வரசுஉனக்கு உரியது என்று சொல்லி; உறுதி ஆக்கிய - அரசவையில்
பலர் முன்னிலையில் உறுதிப்படுத்திய; தரை கெழு செல்வத்தை - கோசல
நாட்டொடு பொருந்திய அரசாட்சிச்செல்வத்தை;  தவிர - இராமன்
ஆளாமல் தவிரும்படி; மற்று ஒரு - வேறாகிய ஒரு; விரை செறி குழலி
மாட்டு -
மணம் பொருந்திய கூத்தலை உடைய கைகேயியிடம்; அளி்த்த -
கொடுத்துவிட்ட; மெய்யனை - சத்திய வாக்கினனாய தயரதனை; அரைசன்
என்று -
அரசன் என்று; இன்னமும் அறையற்பாலதோ?’ - இனியும்
சொல்லுதல் தகுதியுடையது  ஆகுமோ.’

     அரசவையில்  உறுதிசெய்ததை அந்தப்புரத்தில்  மாற்றியவன் சத்திய
சந்தனா,  அரசனாஎன்று  வெகுட்சியாகக் கேட்கிறான் இலக்குவன், 
‘மெய்யனை’ என்பது  இகழ்ந்துரைத்த வார்த்தை.‘அவன் அரசனாதற்குத்
தகுதியுடையவன் அல்லன்; அவனுக்கென்ன நான் செய்தி சொல்லியனுப்புவது’
என்கின்ற சினவெறுப்புப் புலனாதல்  காண்க.                        42

1882.‘கானகம் பற்றி நல் புதல்வனை காய் உண,
போனகம் பற்றிய பொய் இல் மன்னற்கு, இங்கு
ஊனகம் பற்றிய உயிர்கொடு, இன்னும் போய்
வானகம் பற்றிலா வலிமை கூறு’ என்றான்.

     ‘நல் புதல்வன் - (தன்னுடைய) நல்ல மகன்;  கானகம் பற்றி -
காட்டை அடைந்து; காய் உண - (காட்டில் கிடைக்கும்)  காய்
முதலியவற்றை உண்ண;  போனகம்பற்றிய - (அரண்மனையில்  இருந்து)
அறுசுவை  உண்டி அருந்துகின்ற;  பொய் இல்மன்னர்க்கு - சத்திய
வேந்தனுக்கு; இங்கு - இவ்வுலகில்;  ஊன் அகம் பற்றிய உயிர்கொடு -
உடம்பிடத்தைப் பற்றியுள்ள உயிரைப் பிடித்துக்கொண்டு (வாழ்ந்து
கொண்டிருந்து);  இன்னும் போய் வானகம் பற்றிலா