இலக்குவன் சொன்ன செய்தி | 1881. | ‘உரைசெய்து எம் கோமகற்கு உறுதி ஆக்கிய தரைகெழு செல்வத்தைத் தவிர, மற்று ஒரு விரை செறி குழலிமாட்டு அளித்த மெய்யனை அரைசன் என்று இன்னம் ஒன்று அறையற் பாலதோ? |
‘எம் கோமற்கு - எம் தலைவனாகிய இராமனுக்கு; உரை செய்து - இவ்வரசுஉனக்கு உரியது என்று சொல்லி; உறுதி ஆக்கிய - அரசவையில் பலர் முன்னிலையில் உறுதிப்படுத்திய; தரை கெழு செல்வத்தை - கோசல நாட்டொடு பொருந்திய அரசாட்சிச்செல்வத்தை; தவிர - இராமன் ஆளாமல் தவிரும்படி; மற்று ஒரு - வேறாகிய ஒரு; விரை செறி குழலி மாட்டு - மணம் பொருந்திய கூத்தலை உடைய கைகேயியிடம்; அளி்த்த - கொடுத்துவிட்ட; மெய்யனை - சத்திய வாக்கினனாய தயரதனை; அரைசன் என்று - அரசன் என்று; இன்னமும் அறையற்பாலதோ?’ - இனியும் சொல்லுதல் தகுதியுடையது ஆகுமோ.’ அரசவையில் உறுதிசெய்ததை அந்தப்புரத்தில் மாற்றியவன் சத்திய சந்தனா, அரசனாஎன்று வெகுட்சியாகக் கேட்கிறான் இலக்குவன், ‘மெய்யனை’ என்பது இகழ்ந்துரைத்த வார்த்தை.‘அவன் அரசனாதற்குத் தகுதியுடையவன் அல்லன்; அவனுக்கென்ன நான் செய்தி சொல்லியனுப்புவது’ என்கின்ற சினவெறுப்புப் புலனாதல் காண்க. 42 | 1882. | ‘கானகம் பற்றி நல் புதல்வனை காய் உண, போனகம் பற்றிய பொய் இல் மன்னற்கு, இங்கு ஊனகம் பற்றிய உயிர்கொடு, இன்னும் போய் வானகம் பற்றிலா வலிமை கூறு’ என்றான். |
‘நல் புதல்வன் - (தன்னுடைய) நல்ல மகன்; கானகம் பற்றி - காட்டை அடைந்து; காய் உண - (காட்டில் கிடைக்கும்) காய் முதலியவற்றை உண்ண; போனகம்பற்றிய - (அரண்மனையில் இருந்து) அறுசுவை உண்டி அருந்துகின்ற; பொய் இல்மன்னர்க்கு - சத்திய வேந்தனுக்கு; இங்கு - இவ்வுலகில்; ஊன் அகம் பற்றிய உயிர்கொடு - உடம்பிடத்தைப் பற்றியுள்ள உயிரைப் பிடித்துக்கொண்டு (வாழ்ந்து கொண்டிருந்து); இன்னும் போய் வானகம் பற்றிலா |