பக்கம் எண் :

தைலம் ஆட்டு படலம் 337

சிறந்தன அல்லாத சொற்களைச் சொல்லாதே;’ என்றபின் - என்ற பிறகு;
தேரிடைவித்தகன் - தேர்செலுத்தலில் திறமையாளனாகிய  சுமந்திரன்;
பதைக்கும் நெஞ்சினன் -துடிக்கும்மனம் உடையனாய்;  பாரிடை 
வணங்கினன் -
நிலத்தில்  விழுந்து  வணங்கி;  சேறல் மேயினான் -
செல்லத்தொடங்கினான்.

     வித்தகன் - திறமை உடையவன்.  இங்குத் தேரோட்டும் திறமையும்,
மந்திரித் தன்மையும்ஆம்.                                       45

1885.கூட்டினன் தேர்ப் பொறி; கூட்டி, கோள்முறை
பூட்டினன் புரவி; அப் புரவி போம் நெறி
காட்டினன்; காட்டி, தன் கல்வி மாட்சியால்
ஓட்டினன், ஒருவரும் உணர்வுறாமலே.

     (சுமந்திரன்) தேர்ப் பொறி - தேராகிய பொறியை;  கூட்டினன் -
தயார்செய்தான்;  கூட்டி - அவ்வாறு ஆயத்தம் செய்து;  புரவி -
குதிரைகளை;  கோள் முறை - கொள்ளுகின்ற  முறையிலே; பூட்டினன் -
தேரில் பூட்டினான்; அப்பரவி போம் நெறிகாட்டினன் - அந்தக்
குதிரைகளுக்குப் போகும் வழியைக்காண்பித்தான்;  ஒருவரும் உணர்வு
உறாமல் -
(உறங்குகின்ற  உடன் வந்த நகர மாந்தர்)ஒருவரும் சிறிதும்
உணராதபடி; தன் கல்வி மாட்சியால் - தன் தேரொட்டும் கல்விச்
சிறப்பால்;  ஓட்டினன் - (ஒலியில்லாமல்) ஓட்டினான்.

     குதிரைகளைத் தேரிற் பூட்டுங்கால் சேணம் இட்டுக் கண்ணை
மறைப்பர் ஆதலின், ‘போம்நெறி காட்டினன்’ என்றார். இனி, தேர் சென்ற
கவடுகறைக் காட்டிச் சென்றான் என்றல் இங்குச்சிறப்பின்மை அறிக.
கூட்டினன் - கூட்டி, காட்டினன் - காட்டி, என்று  ஒன்றை ஒன்று சொற்கள்
தொடர்தலின் ‘ஏகாவளி’ என்னும் அலங்காரமாம். ‘கோள் முறை’ என்பது
குதிரைகள் வலம்,  இடம்பூட்டும்  முறையாகும். ‘ஏ’ காரம் ஈற்றசை.    46

இராமன் முதலிய மூவரும் இரவில் செல்லுதல்  

1886.தையல்தன் கற்பும், தன் தகவும், தம்பியும்,
மை அறு கருணையும் , உணர்வும், வாய்மையும்,
செய்ய தன் வில்லுமே, சேமமாகக் கொண்டு,
ஐயனும் போயினான், அல்லின் நாப்பணே.

     ‘ஐயனும் - இராமனும்;அல்லின் நாப்பண் - நள்ளிரவில்;
தையல்தன்கற்பும் - சீதையின் கற்பும்;தன் தகவும் -தன் மேன்மைப்
பண்பும்; நம்பியும் - இலக்குவனும்;  மை அறு கருணையும் - குற்றமற்ற
அருளும்; உணர்வும் -ஞானமும்; வாய்மையும் -சக்தியமும்; செய்ய தன்
வில்லும்
- நேரிய தனது வில்லும் (ஆகிய இவற்றையே);  சேமம் ஆகக்
கொண்டு -
தனக்குப் பாதுகாவலாகக் கொண்டு;போயினான் - சென்றான்.