சிறந்தன அல்லாத சொற்களைச் சொல்லாதே;’ என்றபின் - என்ற பிறகு; தேரிடைவித்தகன் - தேர்செலுத்தலில் திறமையாளனாகிய சுமந்திரன்; பதைக்கும் நெஞ்சினன் -துடிக்கும்மனம் உடையனாய்; பாரிடை வணங்கினன் - நிலத்தில் விழுந்து வணங்கி; சேறல் மேயினான் - செல்லத்தொடங்கினான். வித்தகன் - திறமை உடையவன். இங்குத் தேரோட்டும் திறமையும், மந்திரித் தன்மையும்ஆம். 45 | 1885. | கூட்டினன் தேர்ப் பொறி; கூட்டி, கோள்முறை பூட்டினன் புரவி; அப் புரவி போம் நெறி காட்டினன்; காட்டி, தன் கல்வி மாட்சியால் ஓட்டினன், ஒருவரும் உணர்வுறாமலே. |
(சுமந்திரன்) தேர்ப் பொறி - தேராகிய பொறியை; கூட்டினன் - தயார்செய்தான்; கூட்டி - அவ்வாறு ஆயத்தம் செய்து; புரவி - குதிரைகளை; கோள் முறை - கொள்ளுகின்ற முறையிலே; பூட்டினன் - தேரில் பூட்டினான்; அப்பரவி போம் நெறிகாட்டினன் - அந்தக் குதிரைகளுக்குப் போகும் வழியைக்காண்பித்தான்; ஒருவரும் உணர்வு உறாமல் - (உறங்குகின்ற உடன் வந்த நகர மாந்தர்)ஒருவரும் சிறிதும் உணராதபடி; தன் கல்வி மாட்சியால் - தன் தேரொட்டும் கல்விச் சிறப்பால்; ஓட்டினன் - (ஒலியில்லாமல்) ஓட்டினான். குதிரைகளைத் தேரிற் பூட்டுங்கால் சேணம் இட்டுக் கண்ணை மறைப்பர் ஆதலின், ‘போம்நெறி காட்டினன்’ என்றார். இனி, தேர் சென்ற கவடுகறைக் காட்டிச் சென்றான் என்றல் இங்குச்சிறப்பின்மை அறிக. கூட்டினன் - கூட்டி, காட்டினன் - காட்டி, என்று ஒன்றை ஒன்று சொற்கள் தொடர்தலின் ‘ஏகாவளி’ என்னும் அலங்காரமாம். ‘கோள் முறை’ என்பது குதிரைகள் வலம், இடம்பூட்டும் முறையாகும். ‘ஏ’ காரம் ஈற்றசை. 46 இராமன் முதலிய மூவரும் இரவில் செல்லுதல் | 1886. | தையல்தன் கற்பும், தன் தகவும், தம்பியும், மை அறு கருணையும் , உணர்வும், வாய்மையும், செய்ய தன் வில்லுமே, சேமமாகக் கொண்டு, ஐயனும் போயினான், அல்லின் நாப்பணே. |
‘ஐயனும் - இராமனும்;அல்லின் நாப்பண் - நள்ளிரவில்; தையல்தன்கற்பும் - சீதையின் கற்பும்;தன் தகவும் -தன் மேன்மைப் பண்பும்; நம்பியும் - இலக்குவனும்; மை அறு கருணையும் - குற்றமற்ற அருளும்; உணர்வும் -ஞானமும்; வாய்மையும் -சக்தியமும்; செய்ய தன் வில்லும் - நேரிய தனது வில்லும் (ஆகிய இவற்றையே); சேமம் ஆகக் கொண்டு - தனக்குப் பாதுகாவலாகக் கொண்டு;போயினான் - சென்றான். |