பக்கம் எண் :

தைலம் ஆட்டு படலம் 339

 உரும் ஒத்த சிலையினோரை
     ஒருப்படுத்து உதவி நின்ற
கருமத்தின் விளைவை எண்ணிக்
     களிப்பொடு காண வந்த
தருமத்தின் வதனம் என்னப்
     பொலிந்தது - தனி வெண் திங்கள்.

     தன்னை - (தருமமானது) தன்னை;  மருமத்து  - உயிர் நிலையில்;
ஊன்றும் - தாக்குகின்ற;  மறக் கொடும் பாவம் - கொலைத் தன்மை
உடைய கொடிய பாவத்தை; தீர்க்கும் - அழிக்கின்ற;  உரும் ஒத்த
சிலையினோரை
- இடியைஒத்த வில்லை உடையவர்களாய இராம
இலக்குவர்களை; ஒருப்படுத்து - (காட்டிற்கு வருமாறு)உடன்படுத்தி; உதவி
நின்ற -
தனக்கு உதவிசெய்து நின்ற; கருமத்தின் விளைவை எண்ணி -
நல்வினைப் பயனை மனத்தின்கண் கருதி;  களிப்பொடு - மகிழ்ச்சியோடு;
காண வந்த - அவர்களைப் பார்ப்பதற்கு வந்த; தருமத்தின் வதனம்
என்ன -
தருமதேவதையின் முகம் போல;  தனி வெண் திங்கள் -
ஒப்பற்ற வெண்மையான சந்திரன்;  பொலிந்தது - விளக்கியது.

     அரக்கரை அழித்துத் தன்னைக் காக்க வந்த இராம இலக்குவர்களைக்
காண வந்த தருமதேவதையின் முகம் போலச் சந்திரன் பிரகாசித்தான்
என்றது  தற்குறிப்பேற்றவணி.அரக்கர்க்குப் பயந்து  இதுகாறும் ஒளிந்திருந்த
தரும தேவதை தனக்கு உதவி செய்வார் வந்தபடியால்அவர்களைக் காண
முகம் காட்டியது என்றார். மருமம் - உயிர்நிலை - தருமத்தின்
ஆணிவேரையேஅழிக்கிறவர் அரக்கர் என்பதாம்.                 49

நிலவில் மலர்கள்  

1889. காம்பு உயர் கானம் செல்லும்
     கரியவன் வறுமை நோக்கித்
தேம்பின குவிந்த போலும்
     செங்கழு நீரும்; சேரைப்
பாம்பின தலைய ஆகிப்
     பரிந்தன, குவிந்து சாய்ந்த,
ஆம்பலும்; என்றபோது,
     நின்ற போது அலர்வது உண்டோ?

     காம்பு உணர் கானம் செல்லும் கரியவன் - மூங்கில்கள் உயர்ந்து
வளர்ந்துள்ளகாட்டில் செல்லுகின்ற  இராமனது; வறுமை நோக்கி - (அரச
அணிகள் எதுவும் இல்லாத)எளிய வறிய நிலையைப் பார்த்து; தேம்பின -
மனம் வருந்தி;  செங்கழு நீரும் -செங்கழுநீர்ப் பூக்களும்;