| | திருவின் நாயகனும், தென்பால் யோசனை இரண்டு போனான்; அருவி பாய் கண்ணும், புண்ணாய் அழிகின்ற மனமும், தானும், துரித மான் தேரில் போனான் செய்தது சொல்லலுற்றாம். |
பரிதி வானவனும் - சூரிய தேவனும்; கீழ்பால் பருவரை - கிழக்கே உள்ளஉதயமலையில்; பற்ற முன்னம் - பற்றித் தோன்றும் முன்னர்; திருவின் நாயகனும் -திருமகள் கேள்வானாகிய இராமனும்; தென்பால் - தெற்கே; இரண்டு யோசனை போனான்- இரண்டு யோசனை அளவுள்ள தூரம் சென்றான்; அருவி பாய் கண்ணும் - அருவி போலக்கண்ணீர் வழிகின்ற கண்ணும்; புண்ணாய் அழிகின்ற மனமும் - புண்பட்டு வருந்துகின்ற மனமும்; தானும் - தானுமாகி; துரித மான் தேரில் - வேகமான குதிரைகள் பூட்டியதேரில்; போனான் - சென்ற சுமந்திரன்; செய்தது - செய்த செயல்களை; செப்பலுற்றாம் - (இனிச்) சொல்லத் தொடங்கினோம். யோசனை என்பது நீட்டல் அளவைப் பெயர். துரிதம் - வேகம். 53 சுமந்திரன் வசிட்டனை காணுதல் | 1893. | கடிகை ஓர் இரண்டு மூன்றில், கடி மதில் அயோத்தி கண்டான்; அடி இணை தொழுதான், ஆதி முனிவனை; அவனும், உற்ற படி எல்லாம் கேட்டு, நெஞ்சில் பருவரல் உழந்தான்; முன்னே முடிவு எலாம் உணர்ந்தான், ‘அந்தோ! முடிந்தனன், மன்னன்’ என்றான். |
கடிகை ஓர் இரண்டு மூன்றில் - ஐந்து நாழிகைப் போதில்; கடிமதில்அயோத்தி கண்டான் - காப்பமைந்த மதிலையுடைய அயோத்தி நகரத்தை அடைந்து; ஆதிமுனிவனை - வசிட்டனை; அடி இணை தொழுதான் - பாதத்தில் வணங்கினான்; அவனும்- வசிட்ட முனிவனும்; உற்றபடி எலாம் கேட்டு - வனத்தில் நடந்தவையெல்லாம்கேட்டறிந்து; நெஞ்சில் பருவரல் உழந்தான் - மனத்தில் துக்கம் கொண்டு வருந்தி; முன்னே முடிவு எலாம் உணர்ந்தான் - இனி வரப் போவதை எல்லாம் உணர்ந்தவனாய்; ‘அந்தோ முடிந்தனன் மன்னன்’ என்றான் - ஐயோ! அரசன் இறந்து போனான் என்றான். |