பக்கம் எண் :

344அயோத்தியா காண்டம்

     உழையர் - மந்திரிமார்;  வள்ளல் தேர்கொண்டு வந்தான் என்று
தம் சிந்தைஉந்த -
இராமன் தேர்மீது  ஏறித் திரும்பி வந்துவிட்டான்
என்று தம் மனம் தூண்ட; மன்னனை - தசரதனை; ஊர்கொண்ட திங்கள்
என்ன -
பரிவேடத்தாற் சூழப்பெற்றசந்திரன் போல; சுற்றி -; கார்
கொண்ட மேனியானைக் கண்டிலர் -
மேகம் போன்றமேனியுடைய
இராமனைக் காணாதவராய்; கண்ணில்-; வற்றா நீர் கொண்ட - வறளாத
பெருக்கெடுக்கும் நீரைக் கொண்ட; நெடும் தேர்ப்பாகன் நிலை கண்டு -
நெடிய தேரைச்செலுத்தும் சுமந்திரனது நிலைமையைப் பார்த்து; நிலையின்
தீர்ந்தார் -
தமது நிலைகெட்டழிந்தார்கள்.

     ஊர் - ஊர்கோள். சந்திரனைச் சுற்றிய ஒளி வட்டம். பரிவேடம்
எனவும் பெறும்.  உழையர்- அமைச்சர் - “அறிகொன் றறியான் எனினும்,
உறுதி, உழை இருந்தான் கூறுல் கடன்’ (குறள்.638)என்பதனுள் அமைச்சனை
‘உழை இருந்தான்’ எனல் காண்க.                                 56

தயரதன் வினாதல்

1896. ‘இரதம் வந்து உற்றது’ என்று,
     ஆங்க யாவரும் இயம்பலோடும்,
வரதன் வந்துற்றான் என்ன,
     மன்னனும் மயக்கம் தீர்ந்தான்
புரை தபு கமல நாட்டம்
     பொருக்கென விழித்து நோக்கி,
விரம மா தவனைக் கண்டான்.
     ‘வீரன் வந்தனனோ? என்றான்.

     ‘இரதம் வந்து உற்றது’ என்று- (காடு சென்ற) தேர் வந்து சேர்ந்தது
என்று; ஆங்கு யாவரும் இயம்பலோடும் - அங்குள்ள அனைவரும்
சொல்லியவுடன்; மன்னனும் -தசரதனும்; ‘வரதன் வந்துற்றான்’ என்ன -
இராமன் வந்து  சேர்ந்தான் என்று கருதி; மயக்கம் தீர்ந்தான் - மன
மயக்கம் நீங்கினவனாய்; புரைதபு கமல நாட்டம் -குற்றம் அற்ற தாமரை
மலர்போலும் கண்கள்; ‘பொருக்’ என - சடக்கென; விழித்துநோக்கி -
திறந்து பார்த்து; விரத மாதவனைக் கண்டான் - நோன்பு மேற்கொண்ட
சிறந்த வசிட்ட முனிவனைக் கண்டு; ‘வீரன் வந்தனனோ’? - இராமன்
திரும்பி வந்தானோ; என்றான் -

     ‘பொருக்’ விரைவுக் குறிப்பு மொழி. வரதன் - இராமன்; வேண்டுவார்
வேண்டுவன தருபவன்என்னும் பொருளது.                         57