பக்கம் எண் :

348அயோத்தியா காண்டம்

பரமாத்மாவைப் பெற்றெடுக்க; பெருந்தவம் செய்த நங்கை - பெரிய
தவத்தைச்செய்த பெருமாட்டியாகிய கோசலை; கணவனில் பிரிந்து -
தயரதனாகிய நாயகனைப் பிரிந்து;தெய்வ மருந்து இழந்தவரின் -
தேவாமிர்தத்தை இழந்தவர்களைப் போல; விம்மி -துடித்து; மணி பிரி
அரவின் மாழ்கி-
(தனக்குக் கண்ணாகிய) மாணிக்கத்தை இழந்தபாம்பைப்
போல மயங்கி; அருந்துணை இழந்த - அரிய ஆண்பறவையாகிய
துணையை  இழந்த; அன்றில் பெடை என - அன்றிற் பெண்பறவை போல;
அரற்றலுற்றாள் - புலம்பத்தொடங்கினாள்.

     பரமனுக்கே தாய்தான்; என்றாலும், ‘கணவனை இழந்தோர்க்குக்
காட்டுவது இல்’என்றவகையில் கோசலை அவலம் கொடியது. கோசலையின்
துயரத்தைப் பல உவமைகளால் விளக்கினார்.தேவர்க்கு நிலைபேறு தருவது
அமுதம்; பேரரசி என்ற தகுதிப்பாடு தயரதனால் பெற்றவள் கோசலை.பாம்பு
முதிர்ச்சிக் காலத்தில் மணியை உமிழ்ந்து வெளியே வைத்து இரைதேடும் -
மணி இழந்தால் துடித்து  உயிர் நீக்கும் என்பது  இலக்கியங்களில் வரும்
செய்தி ஆகும். அன்றில் இனைபிரியாதுவாழும் பறவை.  இதனால் இவை
கணவனை இழந்து  துயர் அடையும் கோசலைக்கு உவமை ஆயின.     62

கலிநிலைத்துறை  

1902.‘தானே! தானே! தஞ்சம்
     இலாதான், தகைவு இல்லான்,
போனான்! போனான்! எங்களை
     நீத்து, இப்பொழுது’ என்னா,
வான் நிர் கண்டி மண் அற
     வற்றி, மறுகுற்ற
மீனே என்ன, மெய்
     தடுமாறி விழுகின்றாள்.

     ‘தஞ்சம் இலாதான் - எளிமை இல்லாதவனும்; தகைவு இல்லான் -
எவற்றாலும்தடுக்க முடியாத பெரு வலிமை படைத்தவனும் ஆகிய தயரதன்;
தானே! தானே - தனியாக;  எங்களை நீத்து - எங்களை யெல்லாமல்
கைவிட்டு;  இப்பொழுது போனான்! போனான்!’ -;என்னா - என்று
சொல்லி;  வான் நீர் சுண்டி - மழை நீர் இல்லாமல்போய்;  மண் அற
வற்றி -
மண்ணிலும் நீர் இல்லாமல் வறவி;  மறுகுற்ற - கலங்குதல்
அடைந்த;  மீனே என்ன - மீனைப் போல (உயிர் ஊசலாட);  மெய்
தடுமாறிவிழுகின்றாள் -
உடம்பு நடுங்கி விழுகின்றாள்.

     மேல் நீரும் கீழ் நீரும் இல்லாத பொழுது  மீன் உயிர்வாழ இயலாமல்
தடுமாறுதல் போல,தசரதனை இழந்தும்,  இராமனைப் பிரிந்தும்  கோசலை
தடுமாறினான் என்றார். அடுக்குகள்அவலத்தின்கண் வந்தன.  தஞ்சம். -
பற்றுக் கோடு எனப் பொருள் கொண்டு, பற்றுக்கோடுஅற்றவனாய்ப்
போனான் எனக் கூறி,  இராமனாகிய பற்றுக்கோட்டை  இழந்தபடியால்
என்பதும்ஒன்று.  தஞ்சம்