பக்கம் எண் :

350அயோத்தியா காண்டம்

     ‘மறமன்னன் - வலிமை மிக்க தயரதன்; நோயும் இன்றி -
இறப்பிற்குக்காரணமான பிணி இல்லாமல்;  நோன் - வலிய;  கதிர்,  வாள்,
வேல்;  இவை இன்றி- ஒளியுடைய வாள்,  வேல் முதலிய ஆயுதங்களும்
இல்லாமல்;  செல்வ மக்களின் ஆக -அன்புக்குரிய மக்களினால் ஆக;
மாயும்- இறந்துபட்டான்; காயும் புள்ளி -வெறுக்கின்ற புள்ளிகளையுடைய;
கர்க்கடம் - நண்டு; நாகம் - பாம்பு;  கனிவாழை - பழம் தரும் வாழை
மரம்;  வேய் உம் - மூங்கில் ஆகிய இவற்றை; போன்றான்’ - ஒத்தான்;
என்று  மயங்கா விழுகின்றாள் -  என்று சொல்லிமயங்கி விழுந்தாள்.

     தன் மகனாலேயே மன்னன் இறந்துபட்டான்.  நண்டு கருவுயிர்க்கும்
போது  இறந்து  படும், நாகம் தன் முட்டையாலே இறந்து படும், வாழை
குலை ஈனும் போது இறந்து படும், மூங்கில்தன்பக்கக் கிளைகள் தோன்றும்
போது உராய்வினால் பற்றி அழியும்,  இவ்வாறு இவை தன்வம்சத்தாலேயே
என்று அழுகிறாள் கோசலை. “நண்டு சிப்பி வேய் கதலி நாசமுறும் காலத்து,
கொண்ட கருவழிக்கும் கொள்கை போல்” ‘மெல்லிய வாழைக்குத் தான் ஈன்ற
காய் கூற்றம்’ (நான்மணிக். 84.), “புத்தன்றாய் நண்டு இப்பி வாழை புன்
மூங்கில், கத்தும் விரியன் கடுஞ்சிலத்தி- இத்தனையும், வேலாலும் வாளாலும்
அன்றியே தாம் கொண்ட, சூலாலே தம்முயிர்க்குச் சோர்வு”நீலகேசி உரை
(மேற்கோள் உலோகவசனச் செய்யுள்) ஆகியவற்றை இங்கே ஒப்பு நோக்கி
உணரலாம்.நண்டும், பாம்பும் தன் கருவால் அழியும் என்பதை உயிர்நூலார்
உடன்படுவதில்லை.                                             65

1905.‘வடித் தாழ் கூந்தற் கேகயன்
     மாதே! மதியாலே
பிடித்தாய் வையம்; பெற்றனை
     பேரா வரம்; இன்னே
முடித்தாய் அன்றே மந்திரம்?’
     என்றாள் - முகில்வாய் மின்
துடித்தாலென்ன, மன்னவன்
     மார்பில் துவள்கின்றாள்.

     முகில் வாய் - மேகத்திடத்து;  மின் துடித்தால் என்ன - மின்னல்
துடித்தது போல; மன்னவன் மார்பில்- தசரதன் மார்பில்; துவள்கின்றாள்-
துயரதத்தால் துவளும் கோசலை; ‘வடித்தாழ் கூந்தல் கேகயன் மாதே! -
கை செய்துஅழகுற்றுத் தொங்கி நீண்ட கூந்தலையுடைய கைகேயியே! -
மதியாலே - உன்புத்திவல்லமையால்; வையம் பிடித்தாய்- அரசாட்சியைப்
பிடித்துக் கொண்டாய்;  பேராவரம் பெற்றனை - மாறுபட முடியாத
வரத்தைப் பெற்றாய்;  இன்னே - இப்போதே;  மந்திரம் முடித்தாய்
அன்றே’ -
உன் ஆலோசனையை நிறைவேற்றிக் கொண்டாய் அல்லவா;
என்றாள்-