| நைந்து நீங்கச் செயல் ஓரா மீகாமனைப்போல், நலிவுற்றான். |
வந்த முனிவன் - அங்கே வந்த வசிட்டன்; வரம் கொடுத்து மகனை நீத்தவன்கண்மை - வரத்தைக் கொடுத்து மகனைப் பிரிந்த கொடுமையை; எந்தை -தயரதன்; தீர்ந்தான் - நீங்கினான்; என - என்று; உள்ளத்து -மனத்தில்; எண்ணி எண்ணி இரங்குவான் - நினைத்து நினைத்து மனம்தளர்பவனாய்; உந்து கடலில் - அலை மோதும் கடலில்; பெருங்கலம் ஒன்று உடையாநிற்க - பெரிய கப்பல் ஒன்று உடைந்துவிட; தனி நாய்கன் - தனிப்பட்ட கப்பல்தலைவன் இறந்துபட; செயல் ஓரா மீகாமனைப் போல் - தான் செய்வது இன்னது எனத்தெரியாமல் திகைத்துத் தடுமாறுகின்ற மாலுமியைப்போல; நைவுற்றான் - வருந்தினான். மன்னவன் உடல் மரக்கலம் - மன்னவன் மரக்கலத் தலைவன் - வசிட்டன் மாலுமி என உவமைகொள்க. 74 தசரதன் உடலைத் தைலத்தில் இடுதல் 1914. | ‘செய்யக் கடவ செயற்கு உரிய சிறுவர், ஈண்டையார் அல்லர்; எய்தக் கடவ பொருள் எய்தாது இகவா’ என்ன, இயல்பு எண்ணா, ‘மையற் கொடியாள் மகன் ஈண்டு வந்தால் முடித்தும் மற்று, என்னத் தையற் கடல்நின்று எடுத்து, அவனைத் தயிலக் கடலின்தலை உய்த்தான். |
‘செய்யக் கடவ- (தசரதன் இறந்த பின்னர் அவனுக்குச்) செய்தற்குரிய கடமைகளை;செயற்கு உரிய - செய்தற்கு உரிமை உடைய; சிறுவர் - குமாரர்கள்; ஈண்டையார் அல்லர் - இங்கே இல்லை; எய்தக் கடவ பொருள் எய்தாது இகவா’ - வரவேண்டியவைகள் வராது போகா; என்ன - என்று; இயல்பு எண்ணா - உலக இயல்பும் ஊழின் இயல்பும் கருதி; ‘மையல் கொடியாள் மகன்- மன மயக்கம் கொண்ட கொடியவளான கைகேயியின் மகனாகிய பரதன்; ஈண்டு வந்தால் - அயோத்திக்கு வந்து சேர்ந்தபிறகு;முடித்தும் - (அரசனது உத்திரிகிரியைகளைச்) செய்து முடிப்போம்; என்ன -என்று கருதி; தையல் கடல் நின்று எடுத்து - கோசலை சுமித்திரை கைகேயி மற்றும்அறுபதினாயிரம் மகளிர்களாய பெருங்கடலில் இருந்து தசரதனை எடுத்து; அவனை-; தயிலக்கடலின் தலை உய்த்தான் - கடல்போல் மிகுந்த தயிலத்தினிடத்தில் கொண்டு சேர்த்தான். |