பக்கம் எண் :

366அயோத்தியா காண்டம்

நுண்ணிய இடையினை உடைய சீதையோடும்; இளையானொடும் -
தம்பியாகிய இலக்குவனோடும்;போனான் - (காட்டு வழியே) நடந்து
செல்லலானான்.

     மை, அடர்ந்து கருநிறம் உடையது; செறிவான கருமைக்கு
உவமையாயிற்று, மரகதம் பசுமைநிறம்படைத்ததாய்க் குளிர்ச்சி
தருவதாதலின் நிறத்தோடு தண்மைக்கும் ஒப்பாயிற்று. மறிகடல்நீலநிறம்
படைத்ததாய் இடையறாது இயங்கிக்கொண்டுள்ளது; ஆதலின்,  இயங்குகின்ற
இவனது சோபைக்கு உவமையாயிற்று,  மழை முகில் - கருநிறம் படைத்து
நீர் என்னும் பயனும் உடையகாரணத்தால் உயிர்களுக்கு நலம் செய்வது
ஆதலின் உவமையாயிற்று. கருமையும், தண்மையும், இடையறாஇயக்கமும்,
தண்ணளியாகிய கருணையும் இவற்றுள் தனித்தனி காணல் அன்றி இவை
நான்கும் ஒருங்கேயுடைய இராமபிரானுக்கு ஒருங்கே உடையதொரு உவமை
காண்டல் அரிதாயினமை பற்றி அதிசயித்து இனிஉவமை சொல்ல
மாட்டாமையாகிய இரக்கமும் தோன்றி ‘ஐயோ’ என முடித்தார். ஆயினும்,
அதுவே இராமபிரானது பேரழகை அவர் சொல்லி முடித்ததாக ஆயிற்று -
“அச்சோ ஐயோ என்னே எற்று எவன்எனுஞ்சொல் அதிசயம் உற
இரங்கல்” என்பது  சூடாமணி நிகண்டு. திருக்கோவையாரில் (384.)
பேராசிரியர்,  ஐயோ என்னும் சொல்லைக் குறித்து  இஃது உவமைக்கண்
வந்தது’ என்று கூறியுள்ளமைகொண்டு ஈண்டும் உவமைக்கண் வந்ததாகக்
கொள்ளலாம். நீலநிறம் தன்னுள் கொண்ட எதனையும்வெளிவிடாது
தன்னையே காட்டி நிற்கும் ஆதலின், நீலமேனியனாகிய
இராமனிடத்திலிருந்து வெளிப்படும் ஒளியில் சூரியனது ஒளி மறைந்துவிட்டது
என்றார். ‘அழியா அழகு’ என்பது என்றும்மாயாத தூய அழகு எனப்பெறும்.
அழித்தல் - பிறிதொன்றால் இல்லை என்றாக்கப்படும்.இவ்வழகினும்
சிறந்ததோர் அழகு வந்தால் இது அழகில்லை யென்று அழிக்கப்பெறும்.
அவ்வாறு ஒன்றுஇல்லவே இல்லை ஆதலின், இவன் அழகு ‘அழியா அழகு’
ஆயிற்று. ‘ஓ’ காரம் நான்கும்ஐயப்பொருளின்கண் வந்தன.             1

     வழியிடையே காட்சிகள் கண்டு மூவரும் மகிழ்ந்து செல்லுதல்  

1927.அளி அன்னது ஓர் அறல் துன்னிய
     குழலாள், கடல் அமுதின்
தெளிவு அன்னது ஓர் மொழியாள்,
     நிறை தவம் அன்னது ஓர் செயலாள்
வெளி அன்னது ஓர் இடையாளொடும் -
     விடை அன்னது ஓர் நடையான் -
களி அன்னமும் மட அன்னமும்
     நடம் ஆடுவ கண்டான்.

     அளி அன்னது  ஓர் அறல் துன்னிய குழலாள் - வண்டைப்
போன்ற (கரிய) ஒப்பற்றகருமணல் நெருங்கி இருப்பது போன்ற கூந்தலை
உடையவறும்; கடல் அமுதின் தெளிவு அன்னது  ஓர்மொழியாள் -
கடலின்கண் கடைந்து  எடுத்த தேவர் அமிழ்தத்தின் தெளிவு போன்றது
எனும்படியாகிய ஒப்பற்ற பேச்சினை உடையவளும்;  நிறை