பக்கம் எண் :

கங்கைப் படலம் 369

     சீதையின் சொல்லினிமைக்குக் குழலிசை, யாழிசை, தேன், கட்டி என
இவை உவமையாம்.களை பிடுங்குவார் எறிந்த கருங்குவளை மலர்கள்
சீதையின் கண்போலத் தோன்றிய இராமனுக்குஎன்பதாகும்.             5

1931. ‘அருப்பு ஏந்திய கலசத் துணை,
     அழுது ஏந்திய மத மா
மருப்பு ஏந்திய’ எனல் ஆம் முலை,
     மழை ஏந்திய குழலாள்,
கருப்பு ஏந்திரம் முதலாயின
     கண்டாள்; இடர் காணாள்;
பொருப்பு ஏந்திய தோளானொடு
     விளையாடினள், போனாள்.

     ‘அருப்பு ஏந்திய கலசத்துணை - அரும்பைத் தன் உச்சியில
கொண்டுள்ள இரண்டுபொற்கலசங்கள்; அமுது ஏந்திய மதமா ஏந்திய
மருப்பு’ -
அமுதைத் தன்னிடத்தே வைத்துக்கொண்டுள்ள மதச்
செருக்குடைய ஆண் யானையின் உயர்ந்த தந்தங்கள்; எனல் ஆம் முலை-
என்று சொல்லத்தக்கதாகிய முலைகளையும்;  மழை ஏந்திய குழலாள் -
மேகத்தை ஒத்தகூந்தலையும் உடைய சீதை;  கருப்பு ஏந்திரம் -
கரும்பாலை; முதலாயின கண்டாள் -முதலியவற்றை (அங்கங்கே)
கண்டவளாய்;  பொருப்பு ஏந்திய தோளானொடு - மலையை ஒத்த
திண்ணிய தோளை உடைய இராமனோடு; விளையாடினாள் போனாள் -
விளையாடிக்கொண்டுசென்றாள்.

     அரும்பு என்றது  முலைக்காம்புகளை.  அருப்பு - வலித்தல் விகாரம்.
எந்திரம் எனும் சொல்செய்யுளிசை நோக்கி ஏந்திரம் என நீண்டது.
வழியிடைக் காட்சிகள் கண்டு சீதை வேதனைதெரியாமல் மகிழ்ந்து
சென்றாள் என்பதாம். ஏந்திய.....சொற்பொருட் பின்வரு நிலையணி.        6

1932.பல் நந்து உகு தரளம் தொகு
     படர் பந்திகள் படு நீர்
அன்னம் துயில் வதி தண்டலை,
     அயல் நந்து உறை புளினம்,
சின்னம் தரும் மலர் சிந்திய
     செறி நந்தனவனம், நன்
பொன் உந்திய நதி, கண்டு உளம்
     மகிழ்தந்தனர், போனார்.

     பல் நந்து  உகு - பல சங்குகள் சுக்கிய;  தொகு தரளம் படர்
பந்திகள் படுநீர் -
திரண்ட முத்துகளின் தொடர்ந்த வரிசைகள்
பொருந்திய நீர்த்துறைகளையும்;  அன்னம் துயில் வதி தண்டலை -