| தந்தனன் நெடு நாவாய்; தாமரை நயனத்தான் அந்தணர்தமை எல்லாம், ‘அருளுதிர் விடை’ என்னா, இந்துவின் நுதலாளோடு இளவலொடு இனிது ஏறா. |
(குகன்) சிந்தனை உணர்கிற்பான் விரைவோடும் சென்றான் - (இராமனது)மனக்கருத்தை உணர்ந்தவனாய் விரைந்து சென்று; நெடுநாவாய் தந்தனன்- பெரியமரக்கலங்களைக் கொணர்ந்தான்; தாமரை நயனத்தான்- தாமரை மலர்போலும் கண்களைஉடைய இராமன்; அந்தணர் தமை எல்லாம் - முனிவர்கள் எல்லாரையும்; ‘விடைஅருளுதிர்’ என்னா - ‘எனக்குப் புறப்பட விடை கொடுங்கள்’ என்று கேட்டுப் பெற்று; இந்துவின் நுதலாளோடு - பிறைமதி போலும் நெற்றியை உடைய சீதையோடும்; இளவலொடு -இலக்குவனோடும்; இனிது ஏறா - இனிமையாக அந்நாவாயில் ஏறி, சென்றனன் முற்றெச்சம். வடிவில் முற்றுவினையாய் எச்சப்பொருள் தரும் இத்தகையன முன்னும்உள; பின்னும் வரும். பொருள் நோக்கி இலக்கணம் உணர்க. 33 1986. | ‘விடு, நனி கடிது’ என்றான்; மெய் உயிர் அனையானும், முடுகினன், நெடு நாவாய்; முரி திரை நெடு நீர்வாய்; கடிதினின், மட அன்னக் கதிஅது செல, நின்றார் இடர் உற, மறையோரும் எதி உறு மெழுகு ஆனார். |
(இராமனும்) ‘நனி கடிது விடு’ என்றான் - மிக வேகமாக நாவாய்களைச் செலுத்து என்றுகூற; மெய் உயிர் அனையானும் - உடம்பும் உயிரும் ஒத்த நண்பினை இராமன்பால் உடையகுகனும்; முரிதிரை நெடு நீர்வாய் - ஒடிகின்ற அலைகளையுடைய நீண்ட கங்கை நீரிடத்தே; நெடு நாவாய் - பெரிய ஓடத்தை; முடுகினன் - விரைந்து செலுத்த; அதுகடிதினின் மட அன்னக் கதிசெல - அந்நாவாய் விரைவாக இளைய அன்னப்பறவை நீரிற்செல்லுமாறு போலச் செல்ல; நின்றார் மறையோரும் - கரையின்கண் நின்றவர்களாகியவேதியரும்; இடர் உற - துன்பமடைந்து; எரி உறு மெழுகு ஆனார் - நெருப்பில் பட்ட மெழுகைப் போல மனம் உருகி இரங்கினார்கள். |