பக்கம் எண் :

குகப் படலம் 401

 தந்தனன் நெடு நாவாய்;
     தாமரை நயனத்தான்
அந்தணர்தமை எல்லாம்,
     ‘அருளுதிர் விடை’ என்னா,
இந்துவின் நுதலாளோடு
     இளவலொடு இனிது ஏறா.

     (குகன்) சிந்தனை உணர்கிற்பான் விரைவோடும் சென்றான் -
(இராமனது)மனக்கருத்தை உணர்ந்தவனாய் விரைந்து சென்று; நெடுநாவாய்
தந்தனன்-
பெரியமரக்கலங்களைக் கொணர்ந்தான்; தாமரை நயனத்தான்-
தாமரை மலர்போலும் கண்களைஉடைய இராமன்; அந்தணர் தமை
எல்லாம் -
முனிவர்கள் எல்லாரையும்;  ‘விடைஅருளுதிர்’ என்னா -
‘எனக்குப் புறப்பட விடை கொடுங்கள்’ என்று கேட்டுப் பெற்று; இந்துவின்
நுதலாளோடு -
பிறைமதி போலும் நெற்றியை உடைய சீதையோடும்;
இளவலொடு -இலக்குவனோடும்; இனிது ஏறா - இனிமையாக
அந்நாவாயில் ஏறி,

     சென்றனன் முற்றெச்சம். வடிவில் முற்றுவினையாய் எச்சப்பொருள்
தரும் இத்தகையன முன்னும்உள; பின்னும் வரும். பொருள் நோக்கி
இலக்கணம் உணர்க.                                           33

1986.‘விடு, நனி கடிது’ என்றான்;
     மெய் உயிர் அனையானும்,
முடுகினன், நெடு நாவாய்;
     முரி திரை நெடு நீர்வாய்;
கடிதினின், மட அன்னக்
     கதிஅது செல, நின்றார்
இடர் உற, மறையோரும்
     எதி உறு மெழுகு ஆனார்.

     (இராமனும்) ‘நனி கடிது விடு’ என்றான் - மிக வேகமாக
நாவாய்களைச் செலுத்து என்றுகூற; மெய் உயிர் அனையானும் -
உடம்பும்  உயிரும் ஒத்த நண்பினை இராமன்பால் உடையகுகனும்;
முரிதிரை நெடு நீர்வாய் - ஒடிகின்ற அலைகளையுடைய நீண்ட கங்கை
நீரிடத்தே; நெடு நாவாய் - பெரிய ஓடத்தை;  முடுகினன் - விரைந்து
செலுத்த; அதுகடிதினின் மட அன்னக் கதிசெல - அந்நாவாய்
விரைவாக இளைய அன்னப்பறவை நீரிற்செல்லுமாறு போலச் செல்ல;
நின்றார் மறையோரும் - கரையின்கண் நின்றவர்களாகியவேதியரும்;
இடர் உற - துன்பமடைந்து;  எரி உறு மெழுகு ஆனார் - நெருப்பில்
பட்ட மெழுகைப் போல மனம் உருகி இரங்கினார்கள்.