பக்கம் எண் :

408அயோத்தியா காண்டம்

     தன்னோடும் தம்பியோடும் சீதையோடும் குகனைப் பணித்ததோடன்றிப்
பரதசத்துருக்கனர்களோடும் குகனைப் பணித்த தோழமை அறிந்து
இன்புறத்தக்கது.  துன்பத்திற்குப்பின்னர் இன்பம்;  இப்பிரிவின் பின் ஓர்
இன்பம் உண்டு ஆதலின் அவ் இன்பத்தைத் தருவதாகஇதனை நினைய
வேண்டுமே அன்றித் துன்பமாக நினைத்தல் ஆகாது என்றானாம் -
அன்பிற்கு முடிவுஇல்லை. அது மேலும்  வளர்ந்து  கொண்டே போகும்;
எனவே, இச் சகோதரத்துவத்துக்கும் முடிவில்லைஎன்றானாம். ‘ஓர்’ உரை
அசை.                                                       43

1996.‘படர் உற உளன், உம்பி
     கான் உறை பகல் எல்லாம்;
இடர் உறு பகை யா? போய்,
     யான் என உரியாய் நீ;
சுடர் உ று வடி வேலாய்!
     சொல் முறை கடவேன் யான்;
வடி திசை வரும் அந் நாள்,
     நின்னுழை வருகின்றேன்.

     ‘சுடர் உறு வடிவேலாய்! - ஒளி படைத்த கூரிய தீட்டப்பெற்ற
வேலை உடைய குகனே; உம்பி கான் உறை பகல் எல்லாம் - உன்
தம்பியாகிய இலக்குவன் வனத்தின்கண் நான்வசிக்கும் நாள்கள் எல்லாம்;
படர் உற உளன் - (எனக்கு வருத்தம் நேராமல்) தான்அந்த
வருத்தத்தைத் தாங்க என்னுடனே இருக்கின்றான்; நீ போய் யான் என
உரியாய் -
நீ உன் நாட்டிற்குச் சென்று நான் இருக்கும் ஆட்சி உரிமையில்
இருந்து ஆட்சி புரிவாயாக; யான் வடதிசை வரும் அந்நாள் - நான்
மீண்டு வடதிசை நோக்கி அயோத்திக்கு வரும்அக்காலத்தில்; நின்னுழை
வருகின்றேன் -
உன் இருப்பிடத்திற்கு வருகின்றேன்;  சொல் முறை
கடவென் -
சொல்லிய பேச்சிலிருந்து  மாற மாட்டேன்.’

     ‘யான் என உரியாய்’ நானிருக்குமிடத்தில் நீ இருக்க வேண்டும்
என்பதற்காக நானே நீ,நீயே நான் என்றான் குகனிடம் இராமன். ‘பகல்’
என்றதாயினும் ஆண்டு என்பதாகக் கொள்க.‘எண்ணிய சில நாளில்’ (1984) 
என்பது  போல.                                              44

1997.‘அங்கு உள கிளை காவற்கு
     அமைதியின் உளன். உம்பி;
இங்கு உள கிளை காவற்கு
     யார் உளர்? உரை செய்யாய்;
உன் கிளை எனது அன்றோ?
     உறு துயர் உறல் ஆமோ?
என் கிளை இது கா, என்
     ஏவலின் இனிது’ என்றான்.