தன்னோடும் தம்பியோடும் சீதையோடும் குகனைப் பணித்ததோடன்றிப் பரதசத்துருக்கனர்களோடும் குகனைப் பணித்த தோழமை அறிந்து இன்புறத்தக்கது. துன்பத்திற்குப்பின்னர் இன்பம்; இப்பிரிவின் பின் ஓர் இன்பம் உண்டு ஆதலின் அவ் இன்பத்தைத் தருவதாகஇதனை நினைய வேண்டுமே அன்றித் துன்பமாக நினைத்தல் ஆகாது என்றானாம் - அன்பிற்கு முடிவுஇல்லை. அது மேலும் வளர்ந்து கொண்டே போகும்; எனவே, இச் சகோதரத்துவத்துக்கும் முடிவில்லைஎன்றானாம். ‘ஓர்’ உரை அசை. 43 1996. | ‘படர் உற உளன், உம்பி கான் உறை பகல் எல்லாம்; இடர் உறு பகை யா? போய், யான் என உரியாய் நீ; சுடர் உ று வடி வேலாய்! சொல் முறை கடவேன் யான்; வடி திசை வரும் அந் நாள், நின்னுழை வருகின்றேன். |
‘சுடர் உறு வடிவேலாய்! - ஒளி படைத்த கூரிய தீட்டப்பெற்ற வேலை உடைய குகனே; உம்பி கான் உறை பகல் எல்லாம் - உன் தம்பியாகிய இலக்குவன் வனத்தின்கண் நான்வசிக்கும் நாள்கள் எல்லாம்; படர் உற உளன் - (எனக்கு வருத்தம் நேராமல்) தான்அந்த வருத்தத்தைத் தாங்க என்னுடனே இருக்கின்றான்; நீ போய் யான் என உரியாய் -நீ உன் நாட்டிற்குச் சென்று நான் இருக்கும் ஆட்சி உரிமையில் இருந்து ஆட்சி புரிவாயாக; யான் வடதிசை வரும் அந்நாள் - நான் மீண்டு வடதிசை நோக்கி அயோத்திக்கு வரும்அக்காலத்தில்; நின்னுழை வருகின்றேன் - உன் இருப்பிடத்திற்கு வருகின்றேன்; சொல் முறை கடவென் - சொல்லிய பேச்சிலிருந்து மாற மாட்டேன்.’ ‘யான் என உரியாய்’ நானிருக்குமிடத்தில் நீ இருக்க வேண்டும் என்பதற்காக நானே நீ,நீயே நான் என்றான் குகனிடம் இராமன். ‘பகல்’ என்றதாயினும் ஆண்டு என்பதாகக் கொள்க.‘எண்ணிய சில நாளில்’ (1984) என்பது போல. 44 1997. | ‘அங்கு உள கிளை காவற்கு அமைதியின் உளன். உம்பி; இங்கு உள கிளை காவற்கு யார் உளர்? உரை செய்யாய்; உன் கிளை எனது அன்றோ? உறு துயர் உறல் ஆமோ? என் கிளை இது கா, என் ஏவலின் இனிது’ என்றான். |
|