பக்கம் எண் :

412அயோத்தியா காண்டம்

இராமன் சீதைக்கு வழியில் இனிய காட்சிகளைக் காட்டுதல்  

2001.‘மன்றலின் மலி கோதாய்!
     மயில் இயல் மட மானே! -
இன் துயில் வதி கோபத்து
     இனம் விரிவன எங்கும்,
கொன்றைகள் சொரி போதின்
     குப்பைகள், குல மாலைப்
பொன் திணி மணி மானப்
     பொலிவன - பல - காணாய்!

     மன்றலின் மலி கோதாய்! - மனத்தால் நிரம்பிய மாலை
அணிந்தவளே!;  மயில்இயல் மட மானே! - மயில் போன்ற சாயலை
உடைய இளைய மான் அனையாளே!; இன் துயில்வதி கோபத்து இனம்
விரிவன எங்கும் -
இனிய தூக்கத்தில் உள்ள இந்திரகோபப்பூச்சிகளின்
கூட்டங்கள் பரந்து கிடக்கும் எல்லா இடத்தும்; கொன்றைகள் சொரி
போதின்குப்பைகள் -
கொன்றை மரங்கள் சொரிந்த மலர்த் தொகுதிகள்;
குல மாலைப் பொன்திணிமணி மானப் பொலிவன பல - சிறந்த
மாலைகளின் பொன்னில் பதிக்கப்பட்ட மணிகளைப்போல்
அழகுடையனவாகிய;  காட்சிகள் பலவற்றையும்;  காணாய் - பார்ப்பாயாக.

     இந்திரகோபப் பூச்சி செந்நிறம் உடையது. இரத்தின மணிபோலும்; 
அடுத்துக் கொன்றைமலர் மஞ்சள் நிறம் உடையது ஆதலின் பொன்பெறும்.
இரண்டும் விரவி இருக்கின்ற வழிகள்இரத்தினக் கற்கள் அழுத்திய பொன்
மாலை கிடப்பதுபோல உள்ளன என்றார். குப்பை என்பதுகுவியல்; இங்கு
மலர்க் குவியல்.                                                3

2002.‘பாண், இள மிஞிறு ஆக,
     படு மழை பணை ஆக,
நாணின தொகு பீலி
     கோலின நடம் ஆடல்,
“பூணியல்! நின சாயல்
     பொலிவது பல கண்ணின்
காணிய” எனல் ஆகும்,
     களி மயில் - இவை காணாய்!

     பூண் இயல் - அணிகளை இயல்பாக  உடையவளே!;  களி மயில் -
களிப்புநிறைந்த மயில்கள்; இள மிஞிறு பாண் ஆக - இளைய வண்டு
பாட்டுப் பாடும் பாணன்ஆகவும்;  படு மழை - பொழிகின்ற  மழையின்
ஒலி;  பணை ஆக - பறை ஒலியாகவும்கொண்டு;  நாணின -