பக்கம் எண் :

414அயோத்தியா காண்டம்

 மஞ்ஞையும் மட மானும்
     வருவன பல - காணாய்!

     நெய்ஞ்ஞிறை நெடு வேலின் நிறம் உறுதிறம் முற்றி - நெய்
பூசப்பெற்று நிரம்பியநீண்ட வேற்படையின் தன்மை நிரம்பிய ஆற்றல்
பொருந்தி;  கைஞ் ஞிறை நிமிர் கண்ணாய்!- கை அளவில் அடங்காது
மேற்பட்டுச் செல்கின்ற கண்ணை உடையவளே!; மஞ்ஞையும் மடமானும்-
மயிலும் இளைய மானும்;  மெய்ஞ் ஞிறை விரிசாயல் கண்டும் - உன்
மேனியில் நிரம்பியுள்ள விரிந்த மென்மைத் தன்மையைப் பார்த்தும்;  நின்
விழி கண்டும்-
உன் கண்களைப் பார்த்தும்; இனம் என்று கருதின -
உன்னைத் தம் இனம் என்றுகருதினவாய்;  வருவன பல - வருகின்றன
வாகிய பலவற்றை;  காணாய் -.

     நிறை - ஞிறை. போலி; தம் சாயல் சீதையிடம் இருத்தலால் மயில்கள்
இனம் என்றுவந்தன. விழியைக் கண்டு தன் இனமான மான் என்று கருதி
மான்கள் வந்தன.  நிறம் உறு திறம் -மார்பை ஊடுருவிச் செல்லும்
பேராற்றல் எனலும் ஆம். இங்கு ஆடவர்தம் நெஞ்சத்தை ஊடுருவிச்
செல்லும் ஆற்றலாம்.  என்றே -ஏகாரம் தேற்றம்.                     6

2005.‘பூ அலர் குரவோடும்
     புடை தவழ் பிடவு ஈனும்
மா அலர் சொரி சூழல்,
     துயில் எழு மயில் ஒன்றின்
தூவியின்’ மணம் நாற,
     துணை பிரி பெடை, தான் அச்
சேவலொடு உற ஊடித்
     திரிவதன் இயல் காணாய்!

     பூ அலர் குரவோடும் - பூக்கல் மலர்ந்த குரா மரத்தினோடும்; புடை
தவழ் -
பக்கங்களில் பரவி வளர்கின்ற;  பிடவு ஈனும் - பிடவ மரங்கள்
உண்டாக்கிய; மாஅலர் சொரி சூழல் - பெரிய மலர்கள் விழுந்து
கிடக்கின்ற சுற்றுப் புறங்களில்;  துயில் எழும் - தூங்கி எழுந்த;  மயில்
ஒன்றின் -
ஓர் ஆண் மயிலின்;  தூவி -தோகை யானது;  இன் மணம்
நாற
- இனிய மணம் வீச; துணை பிரி பெடை தான் -சேவலைப் பிரிந்த
பெண்மயிலானது; அச்சேவலொடு உற ஊடித் திரிவதன் இயல் - அந்த
ஆண்மயிலோடு  (வேறு பெண் மயில் உறவு கொண்டதாகக் கருதி) மிகவும் 
ஊடல்கொண்டு மனம்மாறுபடும் தன்மையை;  காணாய்-.

     குரா, பிடவ மலர்கள் விழுந்த இடத்தில் உறங்கி எழுந்த ஆண்மயிலின்
உடல் மணத்தைவேறாகக் கருதிப் பெண்மயில் ஊடியது.                7