பக்கம் எண் :

வனம் புகு படலம் 415

2006. ‘அருந்ததி அனையாளே!
     அமுதினும் இனியாளே! -
செருந்தியின் மலர் தாங்கும்
     செறி இதழ் வன சோகம்
பொருந்தின களி வண்டின்
     பொலிவன, பொன் ஊதும்
இருந்தையின் எழு தீ ஒத்து
     எழுவன; - இயல் காணாய்!

     அருந்ததி அனையாளே! - அருந்ததியை ஒத்தவளே!; அமுதினும்
இனியாளே! -
அமிழ்தத்தைக் காட்டிலும் இனியவளே!; செருந்தியின் மலர்
தாங்கும் -
செருந்திமலரைத் தாங்கிக்கொண்டுள்ள;  செறி இதழ் -
நெருங்கிய இதழ்களை உடைய;  வனசோகம் - காட்டின் கண் உள்ள
அசோகம் ஆனது; பொருந்தின களி வண்டின் பொலிவன -தம்மிடத்தே
பொருந்தினவாய களிப்பு நிறைந்த வண்டுகளாற்  பொலிவனவாகிய அவை;
பொன்னூதும் இருந்தையின் - பொன்னை வைத்து ஊதுகின்ற
பொற்கொல்லனது  கரியில்;  எழுதீ ஒத்து எழுவது  ஓர் இயல் - மேல்
எழுந்து  எரிகின்ற நெருப்பை ஒத்துத் தோன்றுகின்ற ஓர் தன்மையை;
காணாய் -.

     செருந்திப் பூ பொன்னாகவும் அதைத் தாங்கிய அசோக மலர்
நெருப்பாகவும், அதனைச்சுற்றியுள்ள வண்டுகள் கரியாகவும் உவமை
கொள்க. இருந்தை - கரி.                                         8

2007.‘ஏந்து இள முலையாளே!
     எழுத அரு எழிலாளே!
காந்தளின் முகை கண்ணின்
     கண்டு, ஒரு களி மஞ்ஞை,
‘பாந்தள் இது’ என உன்னிக்
     கவ்விய படி பாரா,
தேம் தளவுகள் செய்யும்
     சிறு குறுநகை - காணாய்!

     ஏந்து இளமுலையாளே! - (சாயாது) மேல் நிமிர்ந்துள்ள இளமையான
அழகிய முலையினைஉடையாளே!; எழுத அரு எழிலாளே -
ஓவியத்தில்
எழுதுதற்கரிய அழகு படைத்தவளே!;  ஒருகளி மஞ்ஞை - மயங்கிய ஒரு
மயில்;  காந்தளின் முகை கண்ணில் கண்டு - காந்தள்அரும்பைத் தன்
கண்ணால் பார்த்து;  இது பாந்தள் என உன்னி - இது  பாம்பு என்று
கருதி;  கவ்வியபடி  பாரா - கல்விக் கொண்ட தன்மையைப் பார்த்து;
தேன் தளவுகள்- தேன் பொருந்திய முல்லை அரும்புகள்; செய்யும் சிறு
குறு நகை -
செய்கின்றஎள்ளும் புண்சிரிப்பினை;  காணாய் -.