காந்தள் முகையைப் பாம்பு என்று மயில் கவர, அது கண்டு முல்லை சிரிப்பதாகக் கூறியது. முல்லைஅரும்புகள் பற்களைப் போலும் ஆதலின் அம்முல்லை அரும்புகள் தோன்றிய காட்சியைப்சிரிப்பதாகத் தற்குறிப்பேற்றம் செய்தார். சிறு குறு நகை - சிறு என்பது இகழ்ச்சியையும், குறு என்பது புன் சிரிப்பு என்பதனையும் அறிவிக்க வந்தன. களி மஞ்ஞை என்றது போதை மிகுதியால்காந்தள் முகையைப் பாம்பென மயங்கியது எனக் காரணம் கூறியவாறாம். 9 2008. | ‘குன்று உறை வய மாவின் குருளையும், இருள் சிந்திப் பின்றினது எனல் ஆகும் பிடி தரு சிறு மாவும், அன்றில பிரிவு ஒல்லா; அண்டர்தம் மனை ஆவின் கன்றொடு விளையாடும் களியன பல -. காணாய்! |
குன்று உறை வயமாவின் குருளையும் - மலையில் வாழும் வலிமை உள்ள புலியின்குட்டியும்; இருள் சிந்திப் பின்றினது எனல் ஆகும் பிடி தரு சிறு மாவும் - இருள் கீழேசிதறிப் பின்னிக் கொண்டது என்னும்படியுள்ள கரிய பெண் யானை ஈன்ற சிறிய யானைக் குட்டியும்; அண்டர்தம் - இடையர்களது; மனை - வீட்டில் உள்ள; ஆவின் கன்றொடு -பசுக் கன்றோடு; அன்றில - மாறுபடாதனவாய்; களியன - களிப்புடையனவாய்; விளையாடும் பல - விளையாடுகின்ற பல உயிரினங்களையும்; காணாய் -. கரிய பிடி இருள் பின்னிப் பிணைந்திருத்தல் போலும். பிடி மண்ணில் உள்ளதாதலின்வானத்தில் பரவிய இருள் பூமியில் சிந்திப் பின்னியது போல என்றார். முனிவர் உறைவிடம்ஆதலின் இவை தம்முள் பகை இலவாய் வினையாடின என்க. 10 2009. | ‘அகில் புனை குழல் மாதே! அணி இழை எனல் ஆகும் நகு மலர் நிறை மாலைக் கொம்புகள், நதிதோறும் துகில் புரை திரை நீரில் தோய்வன, துறை ஆடும் முகில் இள முலையாரின் மூழ்குவ பல - காணாய்! |
அகில் புனை குழல் மாதே! - அகிற் புகையால் மணம் ஊட்டிப் புலர்த்தப்பெற்றகூந்தலையுடைய பெண்ணே!; அணி இழை எனல் |