| ஆடிய, சிறை மா வண்டு, அந்தரின், இசை முன்னம் பாடிய பெடை கண்ணா வருவன பல - காணாய்! |
சிறை மா வண்டு- சிறகுகளை உடைய கரிய (ஆண்) வண்டு; கூடிய நறை வாயில்கொண்ட - மிக்க தேனை வாயிற் கொண்டன வாய்; விழி கொள்ளா -(அம்மயக்கத்தால்) விழி திறந்து பார்க்க மாட்டாதவையாய்; மூடிய களி மன்ன -கண்ணை மூடிக்கொள்ளுமாறு போதை பொருந்த; முடுகின நெறி காணா - விரைந்து (பறந்து)செல்லுதற்குரிய வழியைக் காணமாட்டாதனவாய்; அந்தரின் - குருடரைப்போல; முன்னம்இசை பாடிய பெடை கண்ணா வருவன பல- முன்னால் இசைபாடிச் செல்கின்ற பெண் வண்டைக்கண்ணாகக் கொண்டு வருவன பலவற்றை; காணாய்-. குருடர் ஒலியின் மூலம் வழி அறிந்து சேறல் போல, முன்னால் பெண் வண்டுகள் பாடும் ஒலிகேட்டுத் தேன் குடித்து மயங்கிக் கண்திறவா ஆண் வண்டுகள் வழி அறிந்து சென்றன வாதலின்‘பெடை கண்ணா’ என்றார். 13 2012. | ‘கன்னியர் அணி கோலம் கற்று அறிகுநர் என்ன, பொன் அணி நிற வேங்கை கோங்குகள், புகு மென் பூ, அன்ன மென் நடையாய்! நின் அளக நல் நுதல் அப்பும் சின்ன மென் மலர் மானச் சிந்துவ பல - காணாய்! |
அன்னம் மென் நடையாய்! - அன்னப் பறவை போன்ற மெல்லிய நடையை உடையவளே!; பொன் அணி நிற வேங்கை, கோங்குகள் - பொன் போன்ற அழகிய நிறம்படைத்த வேங்கைமரமும் கோங்க மரமும்; கன்னியர் அணிகோலம் கற்று அறிகுநர் என்ன - கன்னிப்பெண்கள் அணிகின்ற அழகுக் கலையைக் கற்றுப் பழகுபவர்களைப் போல; புது மென் பூ -புதிய மென்மையான பூக்களை; நின் அளக நல் நுதல் அப்பும் - உன்னுடைய கூந்தலோடு கூடிய நல்ல நெற்றியிலே அப்புகின்ற; சின்னம் மென் மலர்மான- விடு பூக்களாகிய மெல்லியமலரை ஒப்ப; சிந்துவ பல- சிதறுகின்ற பலவற்றையும்; காணாய் -. கோலம் செய்வாற் நெற்றியில் மலர் அப்புதல் வழக்கு.சின்னம் - விடு பூ. (உதிரிப் பூக்கள்.) கோங்கு, வேங்கை இரண்டும் பொன்னிறம் வாய்ந்த மலர்களை |