பக்கம் எண் :

வனம் புகு படலம் 419

உடையவை. குழலில் வேங்கையும் கோங்கும் அணிவர் என்பதை, “நின்
குழல் வேங்கையம்போதொடு கோங்கம் விராய்” என்பதனுள்
(திருக்கோவையார்.  205)காண்க.                                 14

2013.‘மணம் கிளர் மலர், வாச
     மாருதம் வர வீச,
கணம் கிளர்தரு கண்ணம்,
     கல்லிடையன, கானத்து’
அணங்கினும் இனியாய்! உன்
     அணி வட முலை முன்றில்
சுணங்கினம் அவை மானத்
     துறுவன - அவை காணாய்!

     அணங்கினும் இனியாய்! - தெய்வப் பெண்களைக் காட்டிலும்
இனியவளே;  உன் அணிவடமுலை முன்றில் கணங்கினம் அவை
மான -
உன்னுடைய முத்துவடம் அணிந்த முலைப் பரப்பில்உள்ள தேமல்
திரளைப்போல; வாச மாருதம் வர வீச - வாசனைபொருந்திய
தென்றற்காற்றுமிக வீச;  மணம் கிளர் மலர் - மனம் மிக்கு விளங்கும்
மலர்களின்; கணம்கிளர்தரு கண்ணம் - கூட்டமாக எழும்பிய மகரந்தப்
பொடிகள்; கானத்து -காட்டில்; கல் இடையன - பாறைகளின் இடையில்
உள்ளனவாய்;  துறுவன அவை -நெருக்கமாகச் சிந்திக் கிடப்பனவற்றை;
காணாய் -.

     மகரந்தப் பொடிக்குத் தேமலை உவமை யாக்கினார். முலைப்பரப்பில்
தேமல் போலப் பாறைப்பரப்பில் கண்ணம் நெருங்கிக் கிடப்பன என்று
கொள்க.                                                    15

2014.‘ “அடி இணை பொறைகல்லா”
     என்றுகொல், அதர் எங்கும்,
இடை இடை மலர் சிந்தும்
     இன மரம்? - இவை காணாய்!
கொடியினொடு இள வாசக்
     கொம்புகள், குயிலே! உன்
துடி புரை இடை நாணித்
     துவள்வன - அவை காணாய்!

     குயிலே! - குறில் போன்ற குரல் உடையாளே!; இனமரம் -
கூட்டமானமரங்கள்;  ‘அடி இணை பொறைகல்லா’  என்று கொல் -
(உன்) கால்கள் காட்டு வழியில்நடத்தலைப் பொறுக்கமாட்டா என்று கருதிப்
போலும்; அதர் எங்கும் இடை இடை -வழியிடைகளில் எல்லாம்;
மலர்களைச் சிதறும்;  இவை காணாய் -;  கொடியினொடு இள வாசக்
கொம்புகள்-
 கொடிகளோடு இளைய