பக்கம் எண் :

வனம் புகு படலம் 421

 தீ நிகர் தொழில் ஆடைத்
     திரை பொருவன - பாராய்!’

     மான் இனம் - மான் கூட்டங்கள்; மயில் மாலை- மயில் வரிசைகள்;
குயில் இனம் - குயில் தொகுதிகள்;  வதி - சஞ்சரிக்கின்ற;  கானம் -
இந்தக் காடானது;  பூ  நனை சினை துன்றி -  பூவும் அரும்பும் உடைய
கிளைகள்நெருங்கப்பெற்று;  நால் நிற நளிர் வல்லிக் கொடி - பலவகை
நிறமுள்ள குளிர்ந்தவல்லியென்னும் கொடிகள்; நவை இல பல்கி - குற்றம்
இல்லாதன நிரம்பப் பெற்று;  தீ நிகர் - நெருப்பை ஒத்த;  தொழில் -
சித்திரத் தொழில் செய்யப் பெற்ற; ஆடைத் திரை - திரைச் சீலையை;
பொருவன - ஒத்திருப்பனவற்றை; பாராய் -

     பூங்கொடி, பறவை,  பன்னிறக் கொடிகள் நிரம்பியிருத்தலின் காடு
வண்ண வேலைப்பாடமைந்ததிரைச் சீலையை ஒத்தது என்க. “வித்தகர்
இயற்றிய விளங்கிய கைவினைச், சித்திரச்செய்கைப் படா அம்
போர்த்ததுவே,  ஒப்பத்தோன்றிய உவ வனம்” (மணி. 3:167 -169) என்ற
வரிகளை இதனோடு ஒப்புநோக்குக; ‘தீ’ என்பது புத்தி என்னும்
பொருள்படும் வடசொல்லாகக்கொண்டு கூறுவார் உளர். அது ‘நிகர்’
என்னும் உவமைச் சொல்லோடு ஏலாமை அறிக. பெரிதும்செந்றிறம்
படைத்த கானம் ‘தீ’  நிகர்ந்தது  எனலே பொருந்துவதாம்.             18

இராமன் சித்திரகூட மலையைச் சீதைக்குக் காட்டுதல்  

2017.என்று, நல் மடவாளோடு
     இனிதினின் விளையாடி,
பொன் திணி திரள் தோளான்;
     போயினன் நெறி; போதும்
சென்றது குடபால்; ‘அத்
     திரு மலை இது அன்றோ?’
என்றனன்; ‘வினை வென்றோர்
     மேவு இடம்’ எனலோடும்,

     பொன் திணி திரள் தோளான் - பொன் அணிகள் நெருங்கியுள்ள
திரண்ட தோளினைஉடையவனாகிய இராமன்;  என்று -
இவ்வாறு கூறி;
நல் மடவானோடு - நல்லசீதையோடு; இனிதினின் விளையாடி -
இனிமையாக விளையாடி;  நெறி போயினன் -காட்டு வழியில் சென்றான்;
(அந் நிலையில்) போதும் - சூரியனம்;  குடபால்சென்றது - மேற்குத்
திசையை அடைந்தது (மாலை நேரம் வந்தது);  ‘வினை வென்றோர் மேவு
இடம்’ -
வினைகளை வென்ற முனிவர்கள் தங்கியுள்ள இடமாகிய;  ‘அத்
திருமலை இதுஅன்றோ’ -
அந்தச் சித்திரகூட மலை இதுவல்லவா; 
என்றனன் - என்று  (சீதையைப்