| ஈண்ட யாவரும் நெருங்குவர்‘ என்றனன் இராமன். |
பூண்ட மாதவன் - மேற்கொண்ட தவத்தை உடைய பரத்து வாசன்; அம்மொழி -மேற் சொல்லிய வார்த்தைகளை; விரும்பினன் புகல - அன்பொடு கூற; இராமன்-; நெடுநாள் மாண்ட சிந்தைய! - நீண்ட நாளாகத் தவத்தின் மேற்சென்ற’ பெருமை பெற்றமனத்தினை உடைய முனிவ!; இது - இந்த இடம்; நிறை புனல் நாட்டுக்கு -நிறைந்த நீர்வளம் உடைய எனது கோசல நாட்டுக்கு; நீண்டது அன்று - நெடுந்தொலைவில் உள்ளது அன்று; இவ் வழி - இவ் விடத்தில்; வைகுவென் என்றால் - தங்கியிருப்பேனாயின்; யாவரும் - கோசல நாட்டு மக்கள் யாவரும்; ஈண்ட - விரைவாக; நெருங்குவர் - என்னை வந்து அடைந்துவிடுவார்கள்;’ என்றனன் -. நாட்டுக்கு மிக அருகில் தங்கினால் நாட்டு மக்கள் அடிக்கடி வருவர்; ஆதலின் அது தன்தவத்திற்கும் இடையூறாகும்; முனிவர்களின் கடமைகளுக்கும் இடையூறாகும் என்று புலப்படுத்திமறுத்தான் இராமன். 32 முனிவன் கூறிய அறிவுரை 2031. | ‘ஆவது உள்ளதே; ஐய! கேள்; ஐ - இரண்டு அமைந்த காவதப் பொழிற்கு அப் புறம் கழிந்தபின், காண்டி; மேவு காதலின் வைகுதிர் - விண்ணினும் இனிதால்; தேவர் கைதொழும் சித்திர கூடம் என்று உளதே.’ |
‘ஐய! - இராமனே!; கேள் - கேட்பாயாக; ஆவது உள்ளதே - நீ சொல்லியது உண்மையே ஆகும்; ஐ இரண்டு அமைந்த காவதப் பொழிற்கு? - பத்துக் காததூரம் உள்ள இச் சோலைக்கு; அப்புறம் கழிந்தபின் - அப்பால் சென்ற பிறகு; தேவர் கைதொழும் சித்திர கூடம் என்று உளது - தேவர்களும் வணங்கக்கூடிய சித்திர கூடம்என்று பெயர் பெற்ற மலை உள்ளது; விண்ணினும் இனிது - தேவர் உலகத்தினும் இனிமையானது; மேவு காதலின் வைகுதிர் - பொருந்திய அன்போடு அவ்விடத்தில் தங்கியிருப்பீர்.’ இராமன் கூறியது உண்மையே என்பதை ‘ஆவது உள்ளதே’ என்று கூறி முனிவன் ஏற்றுக் கொண்டான்.அதனால், மேலும் வற்புறுத்தவில்லை. ‘ஏ’ இரண்டும் தேற்றம். 33 |