பக்கம் எண் :

வனம் புகு படலம் 435

 கறுத்த வாள் அரவு எயிற்றினூடு
     அமுது உகக் களித்த;

     வறுத்த வித்திய அனையன வல் அயில் பரல்கள் - நெருப்பில்
வறுத்து விதைக்கப்பட்டன போன்ற  கொடிய கூர்மையான பரற்கற்கள்;
பறித்து வித்திய மலர் எனக்குளிர்ந்தன - பிடுங்கி விதைத்த
மலர்களைப் போலக் குளிர்ச்சி அடைந்தன; பசைந்த-ஈரம் உடையவாயின;
இறுத்து எறிந்தன வல்லிகள் - ஓடிக்கப்பட்டு எறியப்பட்ட கொடிகள்;
இளந் தளிர் ஈன்ற - இளமையான தளிரைத் தந்தன; கறுத்த வாள்
அரவு -
சீறிய கொடிய பாம்பு;  எயிற்றினூடு அமுது  உகக் களித்த -
பற்களின் இடையே இருந்துஅமுதம் சிந்தச் சீற்றம் நீங்கி மகிழ்ச்சி
அடைந்தன.

     பரற்கற்கள் மலராக,  காய்ந்த கொடிகள் தளிர் ஈன,  பாம்பு நஞ்சு
தராமல் அழுதம் சித்தஇவ்வாறு பாலை மாறியது  என்பதாம்.          40

2039.குழுமி மேகங்கள் குமுறின,
     குளிர் துளி கொணர்ந்த;
முழு வில் வேடரும், முனிவரின்
     முனிகிலர், உயிரை;
தழுவி நின்றன, பசி இல,
     பகை இல், தணிந்த,
உழுவையின் முலை மான் இளங்
     கன்றுகள் உண்ட;

     மேகங்கள் குழுமிக் குமுறின - மேகங்கள் கூட்டமாய் வந்து
சப்தமிட்டு;  குளிர்துளி கொணர்ந்த - குளிர்ந்த மழைத்துளியை
மண்ணுக்குக் கொண்டு தந்தன;  முழுவில்வேடரும் - இலக்கணத்தால்
நிரம்பிய வில்லை உடைய வேடர்களும்; முனிவரின் உயிரைமுனிகிலர் -
தவத்தோர்களின் உயிரைக் கோபித்துத் தீங்கு செய்தாரில்லை; மான்இளங்
கன்றுகள் -
மானின் இளைய குட்டிகள்;  தழுவி நின்றன.  பசி இல,
பகை இல தணிந்தஉழுவையின் முலை-
தம்மைத் தழுவி நின்றவனாகிய
பசியும் பகையும் இல்லாது தணிந்த புலிகளின்முலையை; உண்ட -
உண்டன.

     பகை நீங்கி உயிரினங்கள் நட்பாயின என்பதாம்.                41

2040.கல் அளைக் கிடந்து அகடு வெந்து
     அயர்கின்ற கதழ் பாம்பு,
அல்லல் உற்றில, அலை புனல்
     கிடந்தன அனைய;