| வல்லை உற்ற வேய், புற்றொடும் எரிவன, மணி வாழ் புல் எயிற்று இளங் கன்னியர் தோள் எனப் பொலிந்த; |
கல் அளைக்கிடந்து - மலைக்குகையிலே தங்கி; அகடு வெந்து - வயிறுதீய்ந்து; அயர்கின்ற - சோர்கின்ற; கதழ் பாம்பு - சீற்றம் உடைய பாம்பு; அல்லல் உற்றில - (இப்பொழுது) துன்பம் அடைய வில்லை; அலை புனல் கிடந்தன அனைய- அலை வீசும் தண்ணீரில் கிடப்பதைப் போல உள்ளன வாயின; வல்லை உற்ற வேய் -பெருங்காட்டில் முளைத்த மூங்கில்; புற்றொடும் எரிவன - தாம் இருந்த புற்றோடும்எரிந்து போயின (இப்போது); மணி வாழ் புல் எயிற்று இளம் கன்னியர் - முத்துமணி வாழ்கின்ற சிறிய பற்களை உடைய வேட்டுவப் பெண்களின்; தோள் எனப் பொலிந்த - தோள்களைப் போலச் செழிப்புடைய வாயின. வல்லை - காடு . மணி என்பது இங்கு முத்து. முத்துப் போல் தங்கியுள்ள பற்களை உடைய எனஉரைக்க. 42 2041. | படர்ந்து எழுந்த புல், பசு நிறக் கம்பளம் பரப்பிக் கிடந்த போன்றன; கேகயம் தோகைகள் கிளர, மடந்தைமார் என, நாடகம் வயின்தோறும் நவின்ற; தொடர்ந்து பாணரின் பாங்கு இசை முரன்றன தும்பி; |
படர்ந்து எழுந்த புல் - தரைமீது பரவித் தோன்றிய புற்கள், பசுநிறக்கம்பளம் பரப்பிக் கிடந்த போன்றன - பச்சை நிறக் கம்பளம் ஒன்றை விரித்துப்போட்டாற் போல இருந்தன; கேகயம் - மயில்கள்; தோகைகள் கிளர - பீலிகல்அசைய; மடந்தைமார் என - பெண்களைப் போல; வயின் தொறும் - பக்கங்களில்எல்லாம்; நாடகம் நவின்ற - நடனம் பழகின; தும்பி - வண்டுகள்; தொடர்ந்து - (மயிலின் நடனத்தைத்) தொடர்ந்து; பாணரின் - இசைப் பாணர்களைப் போல; பாங்கு இசை முரன்றன - இதமான இசையை ஒலித்தன. பச்சைக் கம்பளம் பரப்பினதுபோல் புற்கள் படந்துள்ளன. மயில் நடனம் ஆட, வண்டுஇசைபாட வழி இனிதாயிற்று என்பதாம். 43 |