பக்கம் எண் :

436அயோத்தியா காண்டம்

 வல்லை உற்ற வேய், புற்றொடும்
     எரிவன, மணி வாழ்
புல் எயிற்று இளங் கன்னியர்
     தோள் எனப் பொலிந்த;

     கல் அளைக்கிடந்து - மலைக்குகையிலே தங்கி;  அகடு வெந்து -
வயிறுதீய்ந்து; அயர்கின்ற - சோர்கின்ற; கதழ் பாம்பு - சீற்றம் உடைய
பாம்பு; அல்லல் உற்றில - (இப்பொழுது) துன்பம் அடைய வில்லை;
அலை புனல் கிடந்தன அனைய- அலை வீசும் தண்ணீரில் கிடப்பதைப்
போல உள்ளன வாயின; வல்லை உற்ற வேய் -பெருங்காட்டில் முளைத்த
மூங்கில்; புற்றொடும் எரிவன - தாம் இருந்த புற்றோடும்எரிந்து போயின
(இப்போது);  மணி வாழ் புல் எயிற்று இளம் கன்னியர் - முத்துமணி
வாழ்கின்ற சிறிய பற்களை உடைய வேட்டுவப் பெண்களின்; தோள் எனப்
பொலிந்த -
தோள்களைப் போலச் செழிப்புடைய வாயின.

     வல்லை - காடு .  மணி என்பது  இங்கு முத்து.  முத்துப் போல்
தங்கியுள்ள பற்களை உடைய எனஉரைக்க.                         42

2041.படர்ந்து எழுந்த புல்,
     பசு நிறக் கம்பளம் பரப்பிக்
கிடந்த போன்றன; கேகயம்
     தோகைகள் கிளர,
மடந்தைமார் என, நாடகம்
     வயின்தோறும் நவின்ற;
தொடர்ந்து பாணரின் பாங்கு இசை
     முரன்றன தும்பி;

     படர்ந்து எழுந்த புல் - தரைமீது  பரவித் தோன்றிய புற்கள்,
பசுநிறக்கம்பளம் பரப்பிக் கிடந்த போன்றன - பச்சை நிறக் கம்பளம்
ஒன்றை விரித்துப்போட்டாற் போல இருந்தன;  கேகயம் - மயில்கள்;
தோகைகள் கிளர - பீலிகல்அசைய; மடந்தைமார் என - பெண்களைப்
போல;  வயின் தொறும் - பக்கங்களில்எல்லாம்;  நாடகம் நவின்ற -
நடனம் பழகின; தும்பி - வண்டுகள்; தொடர்ந்து - (மயிலின் நடனத்தைத்)
தொடர்ந்து;  பாணரின் - இசைப் பாணர்களைப் போல;  பாங்கு இசை
முரன்றன -
இதமான இசையை ஒலித்தன.

     பச்சைக் கம்பளம் பரப்பினதுபோல் புற்கள் படந்துள்ளன. மயில்
நடனம் ஆட,  வண்டுஇசைபாட  வழி இனிதாயிற்று  என்பதாம்.       43