பக்கம் எண் :

வனம் புகு படலம் 437

2042.காலம் இன்றியும் கனிந்தன
     கனி; நெடுங் கந்தம்,
மூலம் இன்றியும் முகிழ்த்தன,
     நிலன் உற முழுதும்;
கோல மங்கையர் ஒத்தன,
     கொம்பர்கள்; - இன்பச்
சீலம் அன்றியும், செய் தவம்
     வேறும் ஒன்று உளதோ?

     கனி - பழங்கள்; காலம் இன்றியும் - தாம் பழுக்க வேண்டிய காலம்
இல்லாத போதும்; கனிந்தன - பழுத்தன;  நெடுங் கந்தம் - பெரிய
கிழங்குகள்; மூலம் இன்றியும் - தாம் தோன்றுதற்குரிய வேர் இல்லாமலும்;
நிலன் உற முழுதும்முகிழ்த்தன - மண்ணில் பொருந்த ழுமுதும்
தோன்றின; கொம்பர்கள் -பூங்கொம்புகள்; கோல மங்கையர் ஒத்தன -
அழகுடைய பெண்களை ஒத்தவையாய்ப் பூத்துவிளங்கின; இன்பச் சீலம்
அன்றியும் செய்தவம் வேறும் ஒன்று உளதோ? -
இன்பத்தைத்
தருதற்குரிய நல்ஒழுக்கமே அல்லாமல் செய்யக் கூடிய தவம் வேறு ஒன்றும்
இருக்கின்றதா?

     மாலை வெம்மை மாறியதற்குக் காரணம் இராமலக்குவர்களது சீலமே
அன்றி வேறில்லை.நல்லொழுக்கம் உடையார்க்கு எல்லாம் வாய்க்கும்
என்பது கருத்து.                                               44

2043.எயினர் தங்கு இடம் இருடிகள்
     இருப்பிடம் ஏய்ந்த;
வயின் வயின்தொறும், மணி நிறக்
     கோபங்கள் மலர்ந்த;
பயில் மரம்தொறும், பரிந்தன
     பேடையைப் பயிலும்
குயில் இரங்கின; குருந்தம் நின்று
     அரும்பின முருந்தம்.

     எயினர் தங்கு இடம் - வேடர்கள் தங்கும் குறிச்சிகள்; இருடிகள்
இருப்பிடம்ஏய்ந்த -
தவமுனிவர்களது  தவச்சாலையைப் போல ஆயின;
வயின் வயின்தொறும் -பக்க இடங்களில் எல்லாம்; மணி நிறக்
கோபங்கள் மலர்ந்த -
செம்மணி போன்றநிறமுடைய இந்திர கோபப்
பூச்சிகள் தோன்றின;  பயில் மரம் தொறும் - நெருங்கியுள்ளமரங்களில்
எல்லாம்;  பரிந்தன பேடையைப் பயிலும் - தம்மைப் பிரிந்து
இரங்கினவாயபெண்குயில்களை அழைக்கின்ற;  குயில் - ஆண்குயில்கள்;
இரங்கின - இரங்கிக்கூவின;  குருந்தம் - குருந்த