வெளிறு நீங்கிய பாலையை - (அம் மூவரும்) குற்றம் நீங்கிய அப்பாலை நிலத்தை;மெல்லெனப் போனார் - மெல்லக் கடந்து சென்றார்கள்; குளிறும் வான் -ஒலிக்கின்ற விண்ணிலே உள்ள; மதிக் குழவி - சந்திரனாகிய குழந்தை(இளஞ்சந்திரன்); தன் சூல் வயிற்று ஒளிப்ப - தன்னுடைய நீர்க்கருப்பம் உற்றவயிற்றிலே மறைந்து கொள்ள; பிளிறு மேகத்தை - இடிக்கின்ற மேகத்தை; பிடி என- பெண் யானை எனக் கருதி; களிறு - ஆண் யானையானது; பெறும் பனைத் தடக்கை - தன்னுடைய பெரிய பனைமரம் போன்ற நீண்ட கையை; நீட்டும் - (வானத்தை நோக்கி)நீட்டுகின்றதாகிய; சித்திர கூடத்தைக் கண்டார் - சித்திரகூட மலையைக்கண்டார்கள். பாலையின் குற்றம் வெம்மையாம். அஃது இப்போது இல்லை ஆதலின் ‘வெளிறு்நீ்ங்கியபாலை’ ஆயிற்று. பிறைமதி மறைந்த கார் மேகத்தைத் தன் சூலுற்ற பிடி என்று கருதி ஆண் யானை கைநீட்டும் என்று சித்திரகூட மலையின் வளமும் உயர்ச்சியும் கூறினார். 47 |