|   | குழைந்த     நுண் இடைக் குவி இள      வன முலைக் கொம்பே!     தழைந்த சந்தனச் சோலை தன்      செலவினைத் தடுப்ப,     நுழைந்து போகின்றது ஒக்கின்ற      மதியினை நோக்காய்! |  
      இழைந்த நூல் - ஓர் இழையாக அமைந்த நூலானது; இணைமணிக்     குடம் சுமக்கின்றதுஎன்ன - இரண்டு மணிக்கற்கள் அழுத்திய குடத்தைச்     சுமக்கின்றது  என்று சொல்லுமாறு; குழைந்த - ஒல்கித் தளருகின்ற;  நுண்     இடை - நுண்ணிய இடையையும்;  குவி இள வனமுலைக் கொம்பே! -      திரண்ட இளமையான அழகிய தனங்களையும் உடைய பூங்கொம்பு     போன்றவளே!;தழைந்த சந்தனச் சோலை - தழைத்து மிகுந்துள்ள     சந்தனமரச் சோலையானது;  தன்செலவினைத் தடுப்ப - (மதியாகிய)     தன்னுடைய வானத்திற் செல்லும் செலவினைத் தடுத்தலான்; நுழைந்து     போகின்றது  ஒக்கின்ற - அந்தச் சோலைக்குள் புகுந்து போவதை ஒத்திருக்கின்ற;  மதியினை - சந்திரனை;  நோக்காய் - பார்ப்பாயாக.      காம்புடைய நகில்கள் உச்சியில் நீலமணி அழுத்திய குடம்     போன்றனவாதலின் ‘மணிக்குடம்’என்றார். வானத்திற் செல்லும் சந்திரன்     அடர்த்தியாகவுள்ள சந்தனச் சோலையில் உள்புகுந்துசெல்வதைப்     போன்றுள்ளது என்றது தற்குறிப்பேற்றவணியாம். தழைத்த என்பது தழைந்த     எனமெலிந்தது.                                                9 |     2055. | ‘உருகு     காதலின் தழைகொண்டு      மழலை வண்டு ஓச்சி,     முருகு நாறு செந் தேனினை      முழைநின்றும் வாங்கி,     பெருகு சூல் இளம் பிடிக்கு ஒரு      பிறை மருப்பு யானை,     பருக, வாயினில், கையின்நின்று      அளிப்பது - பாராய்! |  
      பிறை மருப்பு ஒரு யானை - பிறைமதி போன்ற  தந்தத்தை உடைய     ஒரு களிற்றியானை;பெருகு சூல் இளம் பிடிக்கு - முதிர்ந்த     கருப்பத்தையுடைய இளைய (தன் பெண் யானைக்கு; உருகு காதலின் -      மனம் உருகுதற்குக் காரணமான அன்பினால்; தழை கொண்டு மழலை     வண்டுஓச்சி - தழைகளைக் கொண்டு இனிய குரல் உடைய வண்டுகளை     ஓட்டி;  முருகு நாறு - மணம்வீசுகின்ற;  செந்தேனினை - ;  முழை     நின்றும் வாங்கி - மலைக் குகையிலிருந்தும்எடுத்து; வாயினில் பருக -      வாயால் பருகும்படி; கையின் நின்று - தனது  |