கழியும் தொளையுமாகச் செம்பொன்னால் செய்தவை கொப்பூழுக்கு உவமையாம். தேவஉலகத்தில் உள்ள மாதர் கழற்றி எறிந்த மாலைகளை வானுற ஓங்கி வளர்ந்திருக்கின்ற மலைஅருவிகள் அடித்துக்கொண்டு வருகின்றன என்பது கருத்து. 21 | 2067. | ‘அறை கழல் சிலைக் குன்றவர் அகன் புனம் காவல் பறை எடுத்து, ஒரு கடுவன் நின்று அடிப்பது - பாராய்! பிறையை எட்டினள் பிடித்து, “இதற்கு இது பிழை” என்னா, கறை துடைக்குறும் பேதை ஓர் கொடிச்சியைக் - காணாய்! |
ஒரு கடுவன் - ஓர் ஆண் குரங்கு; அறை கழல் சிலைக் குன்றவர் அகன் புனம்காவல் பறை எடுத்து நின்று அடிப்பது - ஒலிக்கின்ற வீரக்கழலை அணிந்த வில்லை உடையமலைவாழ்நர்களது அகன்ற புனத்தைக் காவல் செய்ய வைத்திருக்கின்ற பறையை எடுத்துக் கொண்டு அடிப்பதனை; பாராய் -; பிறையை - இளம்பிறையை; எட்டினள் பிடித்து -கிட்டிப் பிடித்து; ‘இதற்கு இது பிழை’ என்னா - இப்பிறை மதிக்கு இக்களங்கம்இருப்பது தவறு என்று கருதி; கறை - களங்கத்தை; துடைக்குறும் -துடைத்துவிடுகின்ற; பேதை - சிறுமியாகிய; ஓர் கொடிச்சியை - ஒரு குறமகளை; காணாய் -. தினைப்புனத்துத் தினை கவர வரும் பறவைகளை ஓட்டக் குன்றவர் பறை வைத்திருப்பர். அப்பறையை ஓர் ஆண்குரங்கு எடுத்து அடிக்கிறது. அடுத்து ஒரு சிறிய குறமகள் பிறையைப் பிடித்துஅதன் களங்கத்தைத் துடைக்கின்றாளாம். இதனால் பிறைமதியை ஒட்டி மலை உயர்ந்துள்ளது என்றுசிறப்பித்தவாறு. 22 | 2068. | ‘அடுத்த பல் பகல் அன்பரின் பிரிந்தவர் என்பது எடுத்து நம்தமக்கு இயம்புவ எனக். கரிந்து இருண்ட தொடுத்த மாதவிச் சூழலில், சூர் அரமகளிர் படுத்து வைகிய பல்லவ சயனங்கள் - பாராய்! |
தொடுத்த மாதவிச் சூழலில் - அடர்த்தியாக உள்ள குருக்கத்திக் கொடியால் ஆகியபந்தரில்; சூர் அரமகளிர் படுத்து வைகிய - (தலைவரைப் பிரிந்த) தெய்வத்தன்மை உடையஅரமகளிர் உறங்கியனவும்; |