பக்கம் எண் :

454அயோத்தியா காண்டம்

     கழியும் தொளையுமாகச் செம்பொன்னால் செய்தவை கொப்பூழுக்கு
உவமையாம். தேவஉலகத்தில் உள்ள மாதர் கழற்றி எறிந்த மாலைகளை
வானுற ஓங்கி வளர்ந்திருக்கின்ற மலைஅருவிகள் அடித்துக்கொண்டு
வருகின்றன என்பது  கருத்து.                                    21

2067.‘அறை கழல் சிலைக் குன்றவர்
     அகன் புனம் காவல்
பறை எடுத்து, ஒரு கடுவன் நின்று
     அடிப்பது - பாராய்!
பிறையை எட்டினள் பிடித்து, “இதற்கு
     இது பிழை” என்னா,
கறை துடைக்குறும் பேதை ஓர்
     கொடிச்சியைக் - காணாய்!

     ஒரு கடுவன் - ஓர் ஆண் குரங்கு; அறை கழல் சிலைக் குன்றவர்
அகன் புனம்காவல் பறை  எடுத்து  நின்று அடிப்பது
- ஒலிக்கின்ற
வீரக்கழலை அணிந்த வில்லை உடையமலைவாழ்நர்களது அகன்ற
புனத்தைக் காவல் செய்ய வைத்திருக்கின்ற பறையை எடுத்துக் கொண்டு
அடிப்பதனை;  பாராய் -;  பிறையை - இளம்பிறையை;  எட்டினள்
பிடித்து
-கிட்டிப் பிடித்து;  ‘இதற்கு இது பிழை’ என்னா - இப்பிறை
மதிக்கு இக்களங்கம்இருப்பது தவறு என்று கருதி; கறை - களங்கத்தை;
துடைக்குறும் -துடைத்துவிடுகின்ற; பேதை - சிறுமியாகிய; ஓர்
கொடிச்சியை -
ஒரு குறமகளை;  காணாய் -.

     தினைப்புனத்துத் தினை கவர வரும் பறவைகளை ஓட்டக் குன்றவர்
பறை வைத்திருப்பர். அப்பறையை ஓர் ஆண்குரங்கு எடுத்து அடிக்கிறது.
அடுத்து  ஒரு சிறிய குறமகள் பிறையைப் பிடித்துஅதன் களங்கத்தைத்
துடைக்கின்றாளாம். இதனால் பிறைமதியை ஒட்டி மலை உயர்ந்துள்ளது
என்றுசிறப்பித்தவாறு.                                          22

2068.‘அடுத்த பல் பகல் அன்பரின்
     பிரிந்தவர் என்பது
எடுத்து நம்தமக்கு இயம்புவ எனக்.
     கரிந்து இருண்ட
தொடுத்த மாதவிச் சூழலில்,
     சூர் அரமகளிர்
படுத்து வைகிய பல்லவ
     சயனங்கள் - பாராய்!

     தொடுத்த மாதவிச் சூழலில் - அடர்த்தியாக உள்ள குருக்கத்திக்
கொடியால் ஆகியபந்தரில்; சூர் அரமகளிர் படுத்து வைகிய
-
(தலைவரைப் பிரிந்த) தெய்வத்தன்மை உடையஅரமகளிர் உறங்கியனவும்;