கொடி போல்பவளே!; அலர்கதிர் - ஒளி விளங்குகின்ற சூரியன்; அம் பொன்மால்வரை உச்சி சென்று அணுக - அழகிய பொன் மயமான பெரிய மலையின் உச்சியில் சென்றுசேர; பைம்பொன் மாமுடி மிலைச்சியது ஒப்பது - அம்மலைக்குப் பசிய பொன்னால் பெரியமகுடம் சூட்டியது போல் உள்ளதனை; பாராய் -. சூரியன் உச்சிப் போதில் மலை உச்சியை வந்து அடைகிறபோது மலைக்குப் பொன் மகுடம்சூட்டியதுபோல் தோற்றம் அளிக்கிறது. செப்பின் மேல் வண்ணக்கோலம் எழுதுதல் உண்டாதலின் அதுதொய்யில் எழுதிய முலைக்கு ஒப்பாயிற்று. வனம் - அழகு. 26 | 2072. | ‘மடந்தைமார்களில் திலதமே! மணி நிறத் திணி கல் தொடர்ந்த பாறையில், வேயினம் சொரி கதிர் முத்தம் இடம்தொறும் கிடந்து இமைப்பன, எக்கு இளஞ் செக்கர் படர்ந்த வானிடை, தாரகை நிகர்ப்பன - பாராய்!1 |
மடந்தைமார்களில் திலதமே! - பெண்களில் திலகம் போலச் சிறந்தவளே!; மணி நிறத்திணி கல் தொடர்ந்த பாறையில் - செம்மணியால் ஆகிய (சிவந்த) நிறத்தைஉடைய திணிந்த கல் பரவியிருக்கின்ற மலைப் பாறையில்; வேய் இனம் சொரிகதிர் முத்தம்- மூங்கில் கூட்டம் சொரிந்த ஒளிபடைத்த முத்துகள்; இடம் தொறும் கிடந்து இழைப்பன- அங்கங்கே (பாறைகளின் இடை இடையே) கிடந்து ஒளி வீசி விளங்குகின்றன; எக்குஇளஞ்செக்கர் வானிடை - மேலேறிப் படர்ந்த இளைய செவ்வானத்திடத்து; தாரகைநிகர்ப்பன - நட்சத்திரங்களை ஒத்து விளங்குகின்றன; பாராய்-. செம்மணிக் கற்பாறையில் இடையிடை பரவிச் சிதறிக் கிடக்கும் மூங்கில் முத்துக்கள்செவ்வானத்து விண்மீண்களைப் போல் உள்ளன. எக்குதல் - மேல் ஏறுதல் - இனி மிகுதல் என்னும்பொருள் உடைய தெலுங்குச் சொல் என்பது ஒன்று. 27 | 2073. | ‘குழவு நுண் தொளை வேயினும், குறி நரம்பு எறிவுற்று எழுவு தண் தமிழ் யாழினும் இனிய சொல் கிளியே! முழுவதும் மலர் விரிந்த தாள் முருக்கு இடை மிடைந்த |
|