பக்கம் எண் :

சித்திரகூடப் படலம் 457

கொடி போல்பவளே!; அலர்கதிர் - ஒளி விளங்குகின்ற  சூரியன்; அம்
பொன்மால்வரை உச்சி சென்று அணுக -
அழகிய பொன் மயமான
பெரிய மலையின் உச்சியில் சென்றுசேர; பைம்பொன் மாமுடி
மிலைச்சியது ஒப்பது
- அம்மலைக்குப் பசிய பொன்னால் பெரியமகுடம்
சூட்டியது  போல் உள்ளதனை;  பாராய் -.

     சூரியன் உச்சிப் போதில் மலை உச்சியை வந்து அடைகிறபோது
மலைக்குப் பொன் மகுடம்சூட்டியதுபோல் தோற்றம் அளிக்கிறது. செப்பின்
மேல் வண்ணக்கோலம் எழுதுதல் உண்டாதலின் அதுதொய்யில் எழுதிய
முலைக்கு ஒப்பாயிற்று.  வனம் - அழகு.                           26

2072.‘மடந்தைமார்களில் திலதமே!
     மணி நிறத் திணி கல்
தொடர்ந்த பாறையில், வேயினம்
     சொரி கதிர் முத்தம்
இடம்தொறும் கிடந்து இமைப்பன,
     எக்கு இளஞ் செக்கர்
படர்ந்த வானிடை, தாரகை
     நிகர்ப்பன - பாராய்!1

     மடந்தைமார்களில் திலதமே! - பெண்களில் திலகம் போலச்
சிறந்தவளே!;  மணி நிறத்திணி கல் தொடர்ந்த பாறையில் -
செம்மணியால் ஆகிய (சிவந்த) நிறத்தைஉடைய திணிந்த கல்
பரவியிருக்கின்ற மலைப் பாறையில்; வேய் இனம் சொரிகதிர் முத்தம்-
மூங்கில் கூட்டம் சொரிந்த ஒளிபடைத்த முத்துகள்; இடம் தொறும்
கிடந்து  இழைப்பன-
அங்கங்கே (பாறைகளின் இடை இடையே) கிடந்து
ஒளி வீசி விளங்குகின்றன; எக்குஇளஞ்செக்கர் வானிடை - மேலேறிப்
படர்ந்த இளைய செவ்வானத்திடத்து; தாரகைநிகர்ப்பன -
நட்சத்திரங்களை ஒத்து  விளங்குகின்றன;  பாராய்-.

     செம்மணிக் கற்பாறையில் இடையிடை பரவிச் சிதறிக் கிடக்கும்
மூங்கில் முத்துக்கள்செவ்வானத்து விண்மீண்களைப் போல் உள்ளன.
எக்குதல் - மேல் ஏறுதல் - இனி மிகுதல் என்னும்பொருள் உடைய
தெலுங்குச் சொல் என்பது  ஒன்று.                                27

2073.‘குழவு நுண் தொளை வேயினும்,
     குறி நரம்பு எறிவுற்று
எழுவு தண் தமிழ் யாழினும்
     இனிய சொல் கிளியே!
முழுவதும் மலர் விரிந்த தாள்
     முருக்கு இடை மிடைந்த